அதோ , சாம்பலாய் போகட்டும் அந்த கதிர் வளையம் . கன்னியின் மேனியில் கோவமோ ஏன் , உன்னை வடிக்கும் நேரத்தில் வாரிவழங்கிவிட்டானோ தூரிகையில் வித்தன் அவன் கருநிறம் கொண்டே காவியம் முடித்துவிட்டான் . கண்மை திருட , உயிரோவியம் அனுப்பி வைத்தான் . பிரம்மன் ? புல்வெளியில் பனித்துளிகள் பிரதிபலிக்கும் இவள் விழிகள் . வயலின் வாசித்தே நகர்கின்றன வார்த்தைகள் அல்ல வாழ்க்கையும் கூட வஞ்சிக்கொடிகள் வண்ணமாய் கண்டவனுக்கு அடர் நிறம் என்றதும் ஆச்சர்யமே வானும் விழுங்கும் இருட்டோளியில் நிலா அழகென்றால் , மிளிர மறைந்த இரவும் அதன் அடரும் அழகன்றோ வெட்கி குனிந்து விரல் தரை தேய்த்து , என்னை நோக்கி இன்முகம் கண்டாய் ! பாயும் காற்றில் பல்சுவை கண்டேன் ! பதியம் அன்றி வான்வரை வளர்ந்தேன் . கண்பட்டு விடுமென கண்மை இட்டிருந்தாய் கண்டு கொள்ள கால் நாள் கழிந்தது , உதடுமட்டும் அடர்சிவப்பில் ஒன்றே முக்கால் அங்குலமாய் தனியே தெரிந்தது . அடர்மழையே அழகென்றால் அவள் என்ன ! விதிவிலக்கோ .