Posts

Showing posts from September, 2019

கிறுக்கன் உளறல் -2

வீழும் வான் , ஆசையில் புல் கனவோடு நீ கானலில் நான் விடிந்தது எழுந்தது என்றது கைப்பேசி கூச்சல். கண்ணிமைக்கும் கணத்தில் மின்னல் ஒளி என்னுள் தெறித்தது, வேடிக்கை பார்த்தேன் கண்ணாடியில்  என்முன் நீ. வாடகை வாங்கியது நீ வீசி சென்ற வாசனையும் காது துளைக்கும் சப்த நெரிசலும் புல்லாங்குழல் இசையானது.. கொலுசொடு இணைவுண்டு. ஐந்தடி தொலைவில் ஆச்சர்யம் காண்கிறேன், எடுத்துச்சொல்ல எவருமில்லை.

கிறுக்கன் உளறல்_1

நீல மயில் நித்திரை காண் மழலை வாடிய வானம் வருடிய தென்றல் வந்ததென்னவோ உன் நினைவு . மலை உச்சி மறுமுனையில் கயிர்கட்டி ஊஞ்சலில் ஆடும் காகித காற்றிடமே சென்றுவிட்டேன்.. மோட்சம்பெற. அவள் கண்ட தீ அகம் எரிய களைப்பாறும் தனிமையில் தனியே நான்.