பசி
வியர்வையில் துணி நனைத்து வயிற்றோடு ஒத்திஉலர்த்திய காலத்தில் கனவென்பது ஒருவேளை உணவென்பேன் ! விழும் பருக்கைகள் எனக்காக விழக்கூடாதா என்று வேடிக்கைபார்த்த வித்தியாச மனிதர்களில் அன்று நானும் ஒருவன் இரைக்காமல் சாப்பிடு என்று அம்மா சொல்வதில் என் பசி அடங்கிவிடும் , எதுவும் மிச்சமில்லை எனக்காக ! எச்சில் இலை என்று எட்டிஎரிவதை எச்சிலூற உண்ணும் ஏகோபித்திய மாக்களில் ஒருவன் உடுத்திய துணியில் மிடுக்கைபார்த்து படுத்த இடத்தில் வீட்டை பார்த்து , சாப்பிட்டாயா கேள்வியாய் கேட்டு சந்தித்த மனிதர்கள் கைகுலுக்கி சற்றே பார்த்தால் !ஆன காலம் வீட்டை பிரிந்து விலாசம் தொலைந்து விண்ணே அடைக்கலமாய் வீணே அலையும் எவருக்கும் பொருந்தும் எனக்கும் சமர்ப்பணம் !