Posts

Showing posts from 2016

அவளும் நானும்💑

அவளும் நானும் கனவுகள் காணும் வேளையில் காத்திரு என்ற ஒலி மட்டும் காதுகளில் கேட்டுவிட்டால் உறக்கம் வருமோ மின்மினி பூச்சிகளின் முதுகின் மேலொரு பல்லாக்கு பயணம் வேண்டாம் என்று அலறும் அளவு நிரம்பிய பசியின் உணர்வு காட்டாற்று வெள்ளம் எதோ என்னுள்ளே ஓடிவருவதாய் ஒரு சிலிர்ப்பு வாசங்கள் ஏதும் இல்லாத மலர்போல் ஒரு புன்னகை வறுமை குடிகொண்ட என் முகத்தில் இத்தனையும் , அந்த கணம் , வருடத்தின் மொத்த வாரங்களையும் சுருக்கி ஒரு நாளில் தந்துவிட்டு சென்றுவிட்டால் ஒரு நாழிகையில் தவமேதும் இல்லாமல் கிடைத்தவரமோ இல்லை எனகூரை பெயர்திழுந்து விழுந்த கனமோ கனவிதுதானென்று காட்டிட வந்தவளோ கருவறை சுவரெழுப்பி வசித்திட அழைப்பவளோ  எவள் இவள் வெண்கல பாத்திரமாய் வெளிர்நிரமாய் விடியாத பொழுதாய் விசித்திர உணர்வாய் வேகமாய் துடிக்கும் இதயமாய் கொதியாய் கொதிக்கும் குருதியாய் காற்றடித்து சிறகடிக்கும் ஒரு சிறகாய் சிறுபிள்ளை சிரிப்பாய் வானமே வியந்துபோகும் வெண்ணிலவாய் எண்ணிலவாய் அவள் , கசப்பும் இனிப்பும் கலந்தது வாழ்வென்று அறிந்தேனடி உன் கால்களின் அசைவற்று இரு சக்கர வாகனத்தில் அமர்ந்ததை கண்டு

அவள் காதல் நான்💖💁💃

அவள் காதல் நான் நேரங்களில் அழகு என்பது ஏது அன்று தான் கண்டேன் , ஒவ்வொரு நொடியும் என் பார்வையில் அழகானதை , சட்டென வானம் மொத்தம் தரையிறங்கி மேக போர்வை வீசி விளையாடுவது போல் ஒரு பிரம்மை தென்றல் அன்று எத்துனை வாசத்தினை சுமந்து என்மேல் மோதியதோ பூஜை அறையிலே நான் உணர்ந்த வாசம் சாலை அருகிலே இன்று மரம் தன் இயற்கை காதலியின் கைவிரல் பிடித்து மெல்ல அசைந்து கொண்டிருக்கும் வேளையில் குறுகுறுவென பார்க்கும் குருவிகள் தடதடவென பேசும் காகங்கள் மஞ்சள் மேனியில் பொட்டுவைத்தாற்போல் சிறு சிறு புறாக்கள் கொஞ்சி பேசி செல்லும் கிளிகள் எம்மிருவர் போலவே இணைபிரியாத காதல் பறவைகள் என எனக்கு நிழல் கொடுத்த அம்மரம் இத்தனை வேஷம் அணிந்து என் பார்வைக்கு விருந்தளிக்க அதோ நடந்துகொண்டே பெய்துவரும் அடைமழை தலை குனிந்த படியே என்னை நோக்கி வரும் பாசப்புயல் , என்னவென்று நான் கூற வார்த்தைகள் தொண்டைக்குழியை நசுக்கி நசுக்கி நான் பேசும் நான்கு வார்த்தைகள் கூட உன் பெயராக . வேற்றுகிரக வாசி போல துணைக்கு ஆளில்லாத அகதியை போலவே என் தேகத்தின் வியர்வை குளியல் என்னையே என்னிடம் தனிமைபடுத்த நான்கடி தூ

வயிற்று வலி கடிதம்😖💑👉😖😚🎹

வயிற்று வலி கடிதம் தலைவரே தயவு செய்து என்னை கொன்றுவிடு உன் மடிமேல் எனை சாய்த்து தனிமையில் அமிலம் பருக செய்திடாதே வலிகளும் வேதனை தரவில்லை சுகம் தான் , என் கண்ணீரும் உன் நினைவினை சுமப்பதால் , திரும்பிய திசையெல்லாம் நீ தெரிய போர்வைக்குள் புழுவாய் இங்கே நான் கண்ணுக்குள் நிலவுகள் தங்கிய காலம் எங்கு போயிற்றோ நினைவுகள் மட்டும் சுமந்து செல்கின்றன தேனீ பூச்சியை போல கண்ணீரால் என் கடல் நிரம்பி வழிகிறது நனைந்த உடுப்புடன் நீ நிலவில் குளுரும் என்று மட்டும் அறிந்த எனக்கு இன்றோ எரிந்துகொண்டே வெளிச்சம் தருகிறது அந்த நிலா கண்ணிமைக்குள் கட்டி வைத்த உன்னுருவம் என் கண்ணீரின் தடத்திலே மறைந்துபோன சோகம் என்ன மெல்ல மெல்ல நான் கட்டிய என் காதலின் சுவடுகள் ஒட்டடை சேர்ந்த உதவாக்கரை ஆனதன் காரணம் என்ன உதட்டு சாயம் பூசிய இடம் இன்று வடிவிழந்து நசுங்கிய சேலை கணக்காய் ஆனதன் உள்மூலம் என்னவோ விதியின் பெயரில் நான் மனதில் மணந்த உன்னை எப்படி பிரிப்பது உயிரில் இருந்து இறக்க முடியாமல் தவிக்கிறேன் மனதின் உள்ளே உன்னை கொண்டு மறக்க முடியாமல் தவிக்கிறேன் நினைவில் நிற்கும் உன்னை கொண்டு

பூக்களின் புயல்🌠🌠☁🌸👱

பூக்களின் புயல் சஹாரா சஞ்சலபட்டதோ குளிர்ப்ரதேசமாய் என் கண்களில் மட்டும் தென்படும் இடமெல்லாம் பனித்துளிகள் ஒன்றின்மீதேறி ஒன்று விளையாடிகொண்டு கால்வைத்த இடம்தடம் பதிய நான் சென்ற இடம் ஏது மந்திர ஜாலம் ஏதும் நிகழ்கிறதா என எனக்குள்ளே ஒரு கேள்வி யார்கண் பட்டது மணற்மொத்தம் பனியாக தொலைவிலே பூக்களின் புயல் மெதுவாய் நகர்ந்து என்னை நோக்கியே புயல் கொஞ்சம் விலக உள்ளிருந்து கால்முளைத்த ஒரு தேவதை பூக்களும் வீழ்ந்ததோ இவள் கொண்ட அவ்வழகில் பூவிற்கும் சற்று வேறுபட்ட ஒரு உருவம் அவள் அழகில் உண்மையில் பின்னே நிற்கும் அவ்வளவும் , மைநிறமும் கடன்வாங்கும் அவள் கண்ணிடையே ஊர்ந்துசெல்லும் விழிமுகத்தில் எந்த உலகில் வானவில் ஒருநிறத்தில் நின்றதோ அவ்வுலகில் இருந்து கடந்து வந்து பொருந்திகொண்டதோ இவள் முகத்தில் ஒரு குளத்தில் இருவேறு நிறம் எப்படி சாத்தியபட்டதோ நான் அறியேன் , ஐயோ பரித்துவிட்டனரே என அஞ்சியே போனேன் , பார்த்தால் அது அங்குதான் உள்ளது என்ன இடத்தில் உள்ளது சிவப்பு பழங்கள் மயில்தோகை இங்கே சுருக்கமின்றி அதுவல்லது ஒரு புடவை அவள் உடுப்பில் கண்களை கயிறு கொண்

இன்பக் காட்டினூடே. 👯💏

இன்ப காட்டினூடே திருப்பங்கள் நிறைந்த சாலையிலே நான் மட்டும் நேர்வழியில் புற ஊதா கதிர்களின் தாக்கம் அதிகம் போலவே , கண்ணுக்கு புலப்படாத காதல் அலைகள் மட்டும் இருவேறு தொலைவுகளில் , மேகங்கள் என்னதான் வெண்மை என்றாலும் கருநிறம் சேர்ந்த பின்னரே மழை என பொழிகிறது இதில் நான் கருமையோ மழையோ வானவில்லுக்கும் புதுவர்ணம் தந்து அழகு படுத்தியதடி உன் சிரிப்பு நீ லேசாக உன் இதழ்களை திறந்து மூடுகையில் தென்றல் கூட காவல் தான் , சொர்க்கம் செல்லும் இருவழிகளை அழகாய் கண்டுவிட்டேன் ஐயோ அது உன் மூக்கின் வாசலோ இமைகளுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் ஒரு நொடி திறக்கையில் என் உயிர் நீராகிட கடல் எப்படி வந்தது அடியே பாலை வனத்தின் அருகே வாயருகே நிச்சயம் இனிப்பை வைத்து வீண்பேச்சு எதற்கென்று உன் புலம்பல் என் காதுபட கேட்கிறது , இருந்தாலும் என் மனமோ , தீண்டிவிட தயக்கம் , மெதுவாய் ஒரு வலி சில்லென்று என் இதயத்தின் மேற்பரப்பில் அதையும் அழகாய் எப்படி நான் கூற வார்த்தகைகளில் , மெலிந்து விட்டதோ வானம் என சற்றே பயந்துவிட்டேன் அடடே இது என்ன என்று ! கதிரவன் மட்டும் செந்நிறத்

கடக்கும் நிகழ்காலம்

கடக்கும் நிகழ்காலம் வெள்ளை காகிதத்தின் மெத்தையிலே தவழ்ந்து செல்லும் கவிதை நீ பிடித்து எழுதும் எழுத்தாணி .நான் நான்கில் திசைகள் மறந்து போனது குவியம் மொத்தம் உன் திசை பார்த்தே விளக்கில்லா இரவினை போலானதடி என் வாழ்வும் மின்மினி பூச்சியாய் உன் அன்பு கொஞ்ச நேரம் மட்டும் இறந்துவிட்டால் என்ன ? உன் மூச்சின் பிடியில் சிக்கி நானும் , தேய்ந்து போகிறேன் உன் கண்மை குச்சியாய் என் காதல் விடியல் யாரைத்தான் எழுப்பிடவில்லை , நான் மட்டும் விதிவிலக்கு காதலின் இரவில் நிலவும் நான் காதலின் பகலில் கதிரும் நான் உறக்கமேன்பது எனக்கேது ? உன் விழியின் மொழி அறிந்த பின்னே ஒரு தலையாய் நான் சுற்றினாலும் சலித்து போகவில்லை என்னவளே உன் காற்றில் தக்கையாய் நான் ! முறுக்கி விடுகிறது உன் பார்வை இரும்பாய் என் மனம் திரும்பி விடுவாய் என்றே நான் திரும்பியதில்லை நிமிடத்தில் பாலைவனம் நொடியிலே பசுமை வனம் என்னவோ மாயம் அனைத்தும் உன்னாலே நடந்து தான் செல்கிறாய் நிச்சயம் நடந்து தான் செல்கிறாய் உறுதி கேட்கிறது என் விழிகள் தேவதை அன்றோ சிறு ஏமாற்றம் மின்னலின் மறுபெயரோ உடன

உன் சிரிப்பு

உன் சிரிப்பு இடிகள் ஏதும் இடித்திடவில்லை மின்னலும் வந்ததாய் தெரிந்திடவில்லை சப்தம் கேட்டு அடங்கி முடிகிறது வானவில் காட்சி . கணநேரம் கிட்டுமோ காண நேரம்தான் கிட்டுமோ மறுநொடியில் களைந்து விடுகிறது மேகம் வரைந்த ஓவியம் என்ன வகை தின்பண்டமோ தெரியவில்லை மறுநொடியில் காலியாகிறது வந்தவுடன் மனம் சென்றவுடன் காற்றடிக்கும் திசையெல்லாம் வர்ணம் ஆகுமோ இல்லை .உன்னை கடந்ததால் இருந்திருக்கும் வசந்தங்கள் வரவேற்கும் வாரங்கள் காத்து நிற்கும் தெருமொத்தம் உன்னை காண சேர்ந்து நிற்கும் அழகே உன் அழகின் தரிசனம் காணிடவோ. உன் உதட்டின் வரிகளை நீ விரித்து பற்கள் வானத்தை பறவைகள் பார்க்க இடையே வந்து செல்லும் காற்றாய் உன் நாவு எழுதிவைத்து செல்கிறது ஒற்றை நொடிகளில் ஆயிரம் பக்கங்களை ஒற்றை சிரிப்பினால் . என்ன ஒரு கவிதை அன்றோ . குளிர்காலம் வெயில்காலம் மொத்தம் உன் முகமோ சிரித்தால் குளிர் முறைத்தால் வெயில் , நடுவில் வரும் மழை மட்டும் உன் காதல் , மின்னலின் புகைப்படம் உன் சிரிப்பு கவியரசன் .

காதலின் நுனி.

தளிர் வீசும் ஒரு காலம் கனவோடு கவிதையும் பேசும் தென்றல் என் மூச்சை கடத்தி அவள் ஆடையில் ஒட்டும் மாயம் அரங்கேறும் மந்தை விழிகளிலே இளையவள் கடந்திடும் அக்கணத்திலே என் உயிர் நாடி மொத்தம் ஸ்தம்பித்து ஒரு பொட்டில் தெறிக்கும் என் நெற்றியடி , நேர்த்தியாய் செய்த அப்புருவம் என் விழி கோணத்தில் ஏறிக்கொண்டு வானவில்லாய் மாறி வளைகிறது பூகம்பம் வீசாமல் பூ கம்பம் என்னெதிரே வீசி செல்கையில் தோற்றே போகுதடி, அப்பூகம்பம் , நெடுங்காலம் கழித்து ஒருநாள் மலரும் மொட்டென உன்சிரிப்பு நிற்கையில் மற்றவை எதற்கு . கவிதைகள் பேசும் முன்னர் காற்றும் பேசுதடி விழிகளால் உன்கோலம் என் நெஞ்சில் காற்றடித்தும் அழியாமல் உன் பேரை கேட்குதடி , வாழ வந்தவள் நீதான் என்றும் என் மனதுக்கு சொல்லிவிட்டாயோ பழையவை கழிந்து புதியன புகுகிறது நிகழ்காலம் .உந்தன் ஏமாற்றம் அதிகரிக்கும் என நான் அறிவதில்லை உன் காதல் பாடத்தில் தெரிந்து கொண்டும் அறிய மாறுகிறது ஆழ்மனது ஆசைகள் அடிக்கடி புயலாய் அடித்திடும் போதெல்லாம் தடுப்பணை எழுப்பி தடுக்கிறது கருங்கல் மேடெழுப்பிய அவ்விழிகள் , கூச்சத்துக்கு உன் குணத்தினை

நிறமிகள் ஏறிடும் கண்

நிறமிகள் ஏறிடும் கண் கண்கள் முழுதும் நீரால் நிரம்பிய காலம் கரையேறி நீயால் நிரம்புகிறது நித்தம் வெண்மைக்கும் கருமைக்கும் மத்தியில் வாழ்ந்த என் காலங்கள் நிறமி பிடித்து வழக்கம் மாற்றி வீசியதும் உன்னாலே , வண்ணங்கள் ஏதும் நான் கண்டதும் இல்லை கவனிக்கவும் கவனித்திடவும் வைத்தது உன் கனிவு வசந்தங்கள் கண்டேன் முதல் முதலாய் என் ஸ்பரிசம் என் கைவிரல் தீண்டுகையில் வானம் மொத்தம் உன் கூந்தலாக காட்சி தந்திடுமோ என ஒரு வியப்பு கண்மணிகள் சிந்தாமல் உன் கண்ணின் மையின் கரைகொண்டு சூழ்கிறது என் வாழ்வின் எல்லைகள் விளக்கேற்றிய நேரம் பிரகாசிக்கும் விளக்காய் மஞ்சளான முகம் பளீருகிறது என் பார்வையின் குறுக்கே தாண்டவம் ஏனோ அழகிலே வீதிகள் தொடரில் சாமந்தி பூவின் வர்ணனையோடு ஒரு விளையாட்டு நீ மட்டும் அங்கே நடந்து செல்கிறாய் என்கிறது என் அகம் நிழலும் இங்கு நிறமாய் தெரியுதடி உன் பின்பம் விழுவதாலோ இல்லை உந்தன் எதிரோளிப்போ கட்டில் அடங்காத காட்டாறாக மாறிவிடுமோ உன் நெஞ்சம் என்னிடத்தில் இதயத்துடிப்பும் இயந்திர துடிப்பாய் வெடிக்குமோ காதலின் சூழ்ச்சமத்தில் , நியுரான் எல

தினம் நிதம்

தினம் நிதம் இரு இமைகளும் ஒற்றையாய் கழன்று விழ கருவிழியின் மச்சம் தெறித்து உன் உருவம் வரைந்ததுவிடுகிறது சட்டென முடியும் நேரத்தில் இதயம் செய்த தசை ஏதோ, காதல் தசையோ உன் பெயரின் வசையோ , உன் பெயருக்கு அடிமை ஆனதோ என் கைவிரல்கள் பார்க்குமிடமொத்தம் உன் பெயர் , சிலைகளில் இருந்து கழண்டு விழுந்து உன்னில் பொருந்தி கொண்டதோ அழகே உன் கூர் மூக்கு , பால்வழி அண்டங்கள் கண்டதில்லை யாவரும் உன் விழியின் அண்டத்திலே கண்டேனே நான் மட்டும் வதம் செய்யும் உன் பார்வையை எதை கொண்டு நான் மூட கண்கள் மூடிடவா மறைந்து மறைந்து உன்னை காண என்ன பூச்சியினம் நான் ? அப்படியாவது இருந்து இருக்கலாம் உன் பாதத்தின் சூடிலாவது இதம் கண்டு இருப்பேன் ,, எந்தவித தூரிகை கொண்டுனை வரைந்தான் என்பதே தெரியாமல் உன்னை மெய்துறந்து பார்க்கும் சிறுவன் போல் நான்  , உயிர் வந்து பூண்டதோ தூரிகையின் நார்களுக்கும் , ஆழி பேரலைகளின் வேகம் என்னவென்று நான் அறியா உன் வாசத்தின் வேகம் மட்டும் அறிவேன் ஒவ்வொரு முறையும் சாய்க்கிறதே அழகாக வஞ்சமில்லாமல் வளர்ந்தேனோ தெரியவில்லை , அன்னர்ந்தே பார்க்கிறாய் என்னையும் ந

குருட்டு வெளிச்சம்

குருட்டு வெளிச்சம் மெல்ல தவழ்கிறது உயிருள்ள ஒரு சிப்பி , தன்னுள்ளே முத்தினை அடக்கிக்கொண்டு மெல்ல தவழ்கிறது இரு கால் சிப்பி மண்ணின் கடல் மேலே , கல்லை கட்டி கடலில் போட்டாலும் கருவிற்கொன்னும் ஆகாதுன்னு ஒரு கேள்வி நீ கேட்க கடவுளையும் தவிக்க விட்டு என் தாயும் என்னுடனே பிறக்குமய்யா ரெண்டாம் முறையாக ., உன் வயித்த கிழிச்சு நான் பிறக்க வெளியவந்து நானும் கத்த > நீயும் கத்த மொதமொதலா நீ சிரிச்ச முழுசா உன்ன பாத்துபுட்டு , என் அழுகை நிக்கையிலே உன் நித்திரை இழுக்குமோ , ஒரு குட்டி கதையொன்னு  உனக்காக கொண்டு வந்தேன் அக்கதையும் உன் கதையும் ஒன்றாய் இருந்திடுமோ , நித்தம் நான் கண்முழிச்சேன் என் கண்ணும் படைக்குமுன்னே வெளியே ஒரு சத்தம் என்னவென்று நானும் கேட்க காதுமில்ல அப்போது மூன்றாம் மாதத்துலே என் உருவம் பெரிதாக நான் உணர்ந்தேன் உங்கரத்தை . மெதுவாய் நீ சீண்டும் நேரமெல்லாம் சுகமாய் நான் தூங்க சுத்திநிக்கும்  கடல் மட்டும் வத்திடுமோ வத்தாதோ என் கேள்வி நான் கேட்டேன் பதிலாய் ஒரு மர்ம முடிச்சினை நீ இட்டாய் , தொப்புள்கொடி , உன் முத்தம் மட்டும் நான் உணரவே இல்லை ,

புரியாத புதிர்?

புரியாத புதிர் ? மனதின் ஓரங்களில் கரை இருந்திடும் ஒவ்வொரு நிமிடமும் சிரிப்புகள் பொய்யாய் முடிகிறது . விடிந்திடும் ஒவ்வொரு காலைகளும் ஒரே போலதான் இருக்கிறது . கதிரவன் ஒளிக்கதிர்களுக்கு மட்டுமோ. பாடல்கள் கேட்கப்படுகிறது . இன்ப நேரத்தில் இன்பமாக துன்ப நேரத்தில் துன்பமாக . விலைகொடுத்து வாங்கப்படும் பொருட்களில் அன்பும் இணைகிறது. பொருளால் அன்பு கிடைத்திடுமோ அடியேன் , ஏழைகள் அனைவரும் சைத்தான்களோ . உங்கள் பணக்கார பார்வைகளில் .. அதானே சூரிய பொழுதுகளை கூட கடற்கரையில் கழிக்கும் கூட்டமல்லவா அந்தஸ்து. நிர்வாண உடுப்பில் உடலை மறைத்து . எல்லோரும் கர்வம் கொள்வதில்லை உண்மை உழைப்பால் வந்த பணம் கொண்ட எவரும் பணக்காரராய் நடப்பதும் இல்லை உண்மைதானே .. விடியற்காலை ஓடியும் பகல் பொழுதில் அமர்ந்துகொண்டும் இரவு பொழுதுகளில் குடித்தும் கழிகிறது ,பெரும்பாலான புள்ளிகளின் வாழ்க்கை , எங்கு தொடங்கி எங்கு முடிகிறது தெரியாமல் அலைந்திடும் இவர்களின் மனதுகளுக்கு பேராசை மோகங்கள் மட்டுமே மிச்சம். வாழ்வெனும் கடலில் மூழ்கிய பிறகே தெளிகிறது , அவரவர் நித்திரைகள் . ஆசுவாசம் செய்கிறேன்

காதலுடன் க கற்பனை

காதலுடன் கற்பனை சூரிய மார்க்கமாய் மத்திய வெயில் ஒன்று புவியின் கீழ்த்தளத்தை பார்த்து சிரித்துகொண்டே தன் அக்கினி வியர்வையை தூருகிறது நனைகிறேன் நான் அதில் . உடலின் மொத்த வெப்பமும் ஒரு புள்ளியில் இனைந்து கணம் கூட நேரம் விடாமல் என் நெஞ்சின் அருகே குளிர்வதாய் ஒரு பொல்லாத நினைப்பு . கடிகாரம் கொஞ்சிடுமோ காலம் தான் விடை கேட்குமோ தென்றல் கூட அனுமதி கேட்கிறது அவள் என்னை பிரியும் நேரத்தை எதிர்பார்த்து . விரல்களின் உணர்வுகள் தொட்டுவிட என்னை கேட்கும் மூளையின் ஒருவித பகுதி தானாக கேட்டு அனுமதி மறுக்கபடுகிறது உடனடி பதில் வந்தது அவளின் உள்மனம்  கூறியது . இறக்கைகள் படைக்கவில்லையே எப்படி பறக்கிறாய் என கேட்டாய் , தேவதையின் வாசம் பட்டது என பதில் கூறுகிறேன் . வாஞ்சனை கொள்ளாமல் எப்படி ஒரு கூறிய பார்வை செல்லமாய் கிழிக்கிறது என்னை மொத்தமாய் . விதிவிலக்குகள் விலகி செல்கிறது மதம் என் பாதத்தில் விழுந்து கெஞ்சுகிறது சாதியின் கோரப்பிடி நேற்றே நசுக்கப்பட்டது யோசித்து தான் காதலித்தேன் என தெரியவில்லை , ஆனாலும் யோசிக்குறேன், அவளின் உன்னத கைவிரல் சுற்றும் நாள் எங்கு என்று / அவ

புதிதாக எதற்கு.. புதிதாக்கு.

புதிதாய் வேண்டாம் புதிதாக்கு இதுவரை யாரும் அறிந்தது இல்லை பெண்களின் மனதின் ஆழம் ,, கடினமும் கூட கதிரவன் அனலினை போல . கார்மேகம் முழுவதையும் கண்ணுள்ளே அடக்கி மையாக்கி வைப்பவள் சிருதுளியில் உலகையே நிரப்பிடும் ஒரு அமைதி வெள்ளம் பக்குவப்படும் எரிமலையின் ஒர் இடம் போலவே நிர்கதியின் அர்த்தம் அவள் மனம் மல்லிகையில் உடல் கொண்டு மார்கழியின் குணம் கொண்டு சிலநேரம் பங்குனியின் கோவமும் நடந்திடும் காலையின் பொற்சித்திரம் மங்கள முகமே இச்சையின் ஆசையில் இணங்கியே ஆகிறாள் இயற்கையை அழைத்துண்டு மண்ணுள்ளே செல்கிறாள் பாவம் நீ மனிதி உன் கரங்களில் ஒடுங்கட்டும் உலகத்தின் போர்முகம் . சினங்கொண்டு எழுந்திடு பேதையும் நீயே அறிவையும் நீயே பவளத்தின் கணங்கொண்டு பெண்சிங்கம் உண்டோ வேட்டையின் மாற்றத்தில். ஆடையை உடுத்திடு ஆடையாய் உடுத்திடு காமத்தின் விழிகளில் கருணையை காட்டாமல் ஆடை என்பது உடலை மறைக்கத்தான் புரிந்திடு நிமிர்ந்திடு . தோழியும் நீயே அன்னையும் நீயே தமக்கையும் நீயே என் காதலி மனைவியின் மாற்றங்கள் நீயே கொலை என்பது முடிவுகள் அல்ல கோழைத்தனத்தின் தொடக்கமே நீதான் பாவம் எ

கை ஏந்தும் எதிர்காலம்

கை ஏந்தும் எதிர்காலம் தெருவோரங்களில் விற்கபடுகிறது ஏழைக்குழந்தைகளின் கல்வி , கை ஏந்தும் எதிர்காலம் , வண்ண மீனாய் வளர்த்து என்ன பயன் அலங்காரமோ , மீந்த உணவை கூட குப்பையில் கொட்டும் ஒரு கூட்டமே பசியால் வாடும் நாங்கள் ஏன் தெரியவில்லை உம் கண்களுக்கு கல்வியின் வியாபாரத்தில் தந்தையின் சொத்து ஏற்றுமதியாகிறது மதிப்பெண் இறக்குமதி ஆகிறது நுகர்வோர் புத்தக புழுக்களே , தெருவுக்கு தெரு வீடுகளை விட ,பள்ளிகளே அதிகம் இருந்தும் எழுத்தறிவில்லாதோர் முப்பது சதவிகிதம் வானில் இருந்து குதித்தவர்களோ கண்டதை பார்த்திடும் நம் கண்களுக்கு ,, இவர்களை கண்டும் பார்பதில்லையே அது  ஏன் வாடியதால் வாரப்படும் குப்பையாகிறது நேற்று முளைத்த பூக்களும் , மாக்கள் எம்மாத்திரம் மனத்தால் வடிவமைக்கப்பட்டு உடலால் செய்யபடுகிறது அநாதை குழந்தைகள் வானமே வீடாகிறது குடிசை இவ்வளவு பெரிதோ அத்தனை வசதிபடைத்தவரோ இக்குழந்தைகள் , கேட்பாரற்று .. நாதி இல்லாமல் நாய் போல் இருந்திடும் இவர்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள் மாதர் சங்க கதாநாயகிகளே பேச வாய் வரவில்லையோ சொல்லிடும் எனக்கென என்று யோசிப்போர் பலவிதம்

நடந்திடும் காதல்-2

முதல் பொட்டில் நீ ஏறிடவே முழங்கால் இட்டு தவழ்ந்து வந்தேனோ மூன்று முடிச்சுகள் நீ இடவே முதல் முதலாய் நான் சிரித்தேனோ புன்னகையின் காரணமே என் புன்சிரிப்பின் ஓவியமே எங்கே இருந்தாயாடா இத்துனை நாள் தவற விட்டேனோ , உன் நிழல் என்மேல் விழாமல் . என் ஜாமங்கள் இருட்டில் வாடியதே வந்த ஒரு கணம் நிலவே என் முகம் ஏறியதே. மாயம் செய்து என்னை கொண்டாயோ மனதால் என்னை கொன்றாயோ விழுந்தேன் அடா முதல் முதாலாய் உன் பாத தடம் கண்டு காதலில் என்னை பிழிந்தவனே என்னை எடுத்துகொள் உனதாக பதில் போதுமோ உனக்கு ? இரு மனம் ஏறிட உறவுகளை போலவே மழை வந்து ஆசி அருள மொத்தத்தின் மூலமாய் மூன்றாய் உயிரின் முடிச்சு இணைந்தது கள்வனின் கைகளால் கள்ளியின் கழுத்திலே சாங்கியத்தின் தேடலாக தென்றல் வந்து துணை புரிய அகதி மனங்களின் விளிம்புகள் மட்டும் இணைந்தே விட்டது ஒரு துளி தங்கத்தின் முடிச்சிலே காண நேரம் வாய்க்குமோ வானவில் மழைதனில் ஒன்றாய் நிற்பதை கண்டே கண்டேன் கண்ணருகே இஜ்ஜோடியின் வாயிலாக கள்வருக்கு ஒரு மடல், வெட்கத்தின் உச்சி முனையில் பேனா முனை கொண்டு தவழுகிறேன் கண்ணுக்கு ஒரு முத்தமிடு கண்ணோடு கதை பேசு

நடந்திடும் காதல்

நடந்திடும் காதல் நிழல் தரையினில் விழுகாத நேரம் . அவள் மேகத்தின் இருட்டு என்மேனியின் ஆக்கிரமிப்பு நடத்திட , வானங்கள் பொய்யாய் போகுமளவு அவளின் நெற்றி காண , சிந்தனையின் ஆணிவைத்து அடித்தார் போல அவளின் புகைப்படம் தொங்கியது என் உயிர்அச்சாணி பிடிகொண்டு . ஒரு ஒரு நொடியும் வண்ணமாகுமோ அழகே ,வசந்தங்களின் முடிவு பாதை உன் இல்லம் நோக்கிதான் நிற்குமோ , விபரீதமாய் போகுமடி , கண்ணிமையை மூடிவிடு , சற்றே நான் கடக்கும் வரை . அலைச்சல் கொண்டு தெருவில் கூட ,பூக்கள் பூக்குமடி எங்கே நீ நடந்த தடம் . வாசல் இல்லாத இல்லமாக அனைத்தும் என் சொந்தம் ஆகுதடி எனக்கென நீ இருக்கையில் உலகமே என் காலடியில் ஒருதலையாய் என் தலையும் உன் தலையை சுற்றிட உன் முக திருப்பல் கூட மண் பாற்பது ஏனடி . வழக்கமாய் பார்க்கும் அத்தனையும் வண்ணமாய் போகுமோ , ஆயிரம் நிறங்களின் எதுவடி நீ . பிரம்மிப்பில் உச்சம் உன் விழிகளின் மரண பள்ளம் தானே இருள்வதற்குள் வீடு செல்லாத உன் இமைகளுக்கு என் பார்வையின் ஆழம் மட்டும் அழகாய் புரிகிறதே , என் விரல் பிடிக்கும் வரை எங்கே நீ இருந்தாயோ என் கண்ணில் தெரிந்த பின்னே , என

ஆலங்கட்டி

ஆலங்கட்டி கண்ணோரத்தில் நீ வரும் நேரத்தில் நெஞ்சோரத்தில் புயல் மழை வருவதில் ஐயம் ஏதோ விதம் விதமாய் நிலவும் தெரிந்திடுமோ வண்ணங்களின் துணியிலே அதுவும் மிதந்திடுமோ வானத்தின் இருளில்தான் மிளிருமோ விழிக்கோளம் சுழற்றி அடிக்குமோ , மாயம் தானடி,நீ வந்து சென்ற அடுத்த கணம் குப்பையின் வடிவங்களில் ஓவியம் காணும் என்னிரு குருட்டு விழிகள். வித்தியாசம் தந்திடாமல் நகரும் காற்றுக்கும் உடை உடுத்தி பார்க்க தூண்டும் நயம் பூண்ட நெஞ்சம் ஏழைகள் கூரை மழையினில் நினைவது போலவே நினைகிறேன் காதல் மழை பசித்தும் விரதம் இருக்கும் ஒரு தியான நிலை , நினைவுகள் ஒரு சேர அவள் மட்டும் மண்டையின் நடுவில் நினைத்திடும் யோகா இல்லாத யோகா அத்துனை பொருத்தம் சேருமா என தெரிந்துவிடவில்லை என் விழிகளில் உண்மையாக பொருந்திவிட்டாள். உச்சி தலையின் ஒரு குளிர்ச்சி என் தாய் ஜென்னி வந்து இருக்குமோ என என்னை கேட்க என் உள்மனம் என்னிடமே இல்லை அவள் வந்துவிட்டாள். பாத சுவடுகள் எனக்கே தெரிவது இல்லை அத்தனை பொறுமை என் நடையினிலே எனக்கே தெரிந்துவிடாமல் . அழகாய் நானும் ஆகிடாமல் நித்தம் ஆகிறேன் என் கண்ணாடிகளில் ம

அசுர அழகு

பூமியிற்கும் ,,,பால்வழிக்கும் புதிதாய்  ஒரு தொடர்பு முளைக்குமோ ,, அவள் புன் சிரிப்பு ,,, புவியினை புன்னாக்கிவிடுமோ ,, அச்சத்தில் மற்றவை ,, கிரகங்கள் ,,போர்வையில் ,, சிறு சிறு துளைஇட்டு அவள் நடப்பதை பார்க்கும் ,, மந்திர துளைகள் ,,துகள்கள் , வான்மிஞ்சும் ,,உயிரம் அவள் கொள்ளவில்லை ,, பிறகேன் ,,இத்தனை வாக்கிய பந்தம் மற்றவை இடையே ,, விரதம் கொல்லாத ,,பிரார்த்தனை போலவே , திங்களும் செவ்வாயும் மோதிவிடுமோ , உடன் நிற்கும் புதனிற்கு ,, பங்குனி வெயில் உள்மனதில் , பார்வையில் வெடி வைக்கும் ,, அவளுக்கு வர்ணம் பூசவும் திட்டம் ,,புவி மழையில் , நிறம் மாற்றினால் அழகு குறையுமோ ,, அனாவசிய யோசிப்பு , வர்ணபகவான் உடன் வருகை ,, மேலாதிக்க குழுவுடன் ,, சிந்தனை இயலாத ,, அளவா கூட்டம் , திடிரென்று இத்தனை அழகு எங்கே வந்தது ,, எதற்கென வந்தது ,, படைத்தவனே புலம்பிடும் ,,முதல் கோலம் , பகலிடையே தோன்றும் இரவா ,, அவள் ,,தனித்து தெரிந்திட அசுர அழகென்பது ,,இதுதானே , வான்விழி தேவதைகள் பொறாமை கொன்றிடும் ,, மனதில் குன்றிடும் , தேசங்கள் ,,ஒன்றிணைத்து ,, உலக மொத்த , கலைநயம் ,,ஒரு சேர

நீதான் விழியடி

நீதான் விழியடி ,, கவிதைகளில் உச்சம் தெறித்து ,, பிதறிதள்ளும் ஆனந்த கிறுக்கன் நான் ,, வார்த்தைகளாய் வந்து விழும் அவளின் சிறு சிரிப்பு மணிகளுக்கு வெட்கப்படும்..மனம் வர்ணம் உடுத்தும் அவளின் வானவில் பார்வை ,என் நினைவிற்கு ,, செந்தேளின் கொடுக்கும் சாய்வாய் போகும் ,, அவளின் தொடுதல் ,,பட்ட கரம் , வெண்முகம் கண்ட அந்நாளில் இருந்தே , இம்முகம் வாடியது இல்லை ஒரே துளியில் மழையும் ,, ஒரே துளியில் நெருப்பும் தெரியுமடி ,,,இரண்டுமே உன் பார்வையோ ,, ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் வருமோ ,, உன் பற்றி என் நெற்றி தரும் சொற்கள் ,, எதுகையின் கைபிடியும் ,, மோனையின் மெய் உறவும் ,, என் இடம் சேருதடி,, கண்டநாள் முதல் கிரங்கிதவிக்கும் என் இதயத்திற்கு உன் பதில் ஏதோ ,, உவமை அணியை தன்] உடுப்பேன கொண்டவளே ,, மலர்சிந்தும் உன் மொழிமொத்தம் தந்துவிட ,,வேண்டாம் ,, ஒற்றை வார்த்தைகளில் என் உயரினை பறித்து விடு அது போதும் ,, கொண்டு சென்று என்னை அடைத்தாலும் சரி எப்படியாவது என்னை உன் மனதில் அடைத்துவிடு செல்ல சொற்களால் என்னை தீண்டிவிட வேண்டாம் ,,சொல்லாமல் இருந்திடாமல் இருந்திடு அது போதும் ,,

வியர்வை அகம்

வியர்வை அகம் ,, சாலையின் புறத்திலே,, புதரின் குடிசையிலே ,, பச்சிளம் சத்தம் பாடுதம்மா ,, பாலுக்காக கதறுதோ,, பெத்தவளை தேடுதோ ,, படைச்ச்சவனை திட்டுதோ , எது சொன்னாலும் எமக்கது புரியாதே ,,, சுடுகிற வெயிலும் இல்லை ,, குளுருற இரவும் இல்லை ,, மனத்துளே அன்பு இல்லை ,, கொடுக்கவும் நாதி இல்லை ,, அகதி பூவாய் சேரிலே மலர்ந்தேன் , அழகாய் பார்த்திடவும் கண்களும் இல்லை ,, விலங்கு உருவாய் நடையிலே ஆனேன் ,, மதித்து பேசிடவும் கூட்டங்கள் இல்லை ,, சோற்று சண்டையிலே படிப்பும் ஓடுதம்மா ,, நாற்று நாடுவதற்கும் நிலமும் இல்லையம்மா ,, விரதம் நானும் இல்லை ,, விரதம் இருக்கிறேன் ,, பசியும் எனக்கும் இல்லை பொய்களும் சொல்லுறேன் ,, படித்திட சான்று இல்லை பள்ளியை நாடினேன் ,, நல்லவர் அழியவில்லை கல்வியும் கற்கிறேன் ,, விடலை பருவமும் விற்று தொலைக்குறேன் ,, வறுமை போர்வையிலே முழுதும் மறைகிறேன் ,, தினம் செத்து தினம் பிழைக்குறேன் ,, உழைப்பு மட்டும் வருமா ,, மனம் வெறுத்து கணம் விழுகிறேன் , பிழைப்பு எனக்கு வரமா ,,? கன்னி பருவம் காதலை சுமக்குமோ ஏழை மழைதனில் நினைந்தே இருப்பேனோ ,, தெருவிளக

மஞ்சள் நிலவு

மஞ்சள் நிலவு இதய நாளத்தின் இடையே ஒரு அழகான கோடு. வரும் உதிரம் உன்னை தொட்டு குளிராய் போக ,,,விறைத்து போவேனோ உரைத்து சாவேனோ ,,, வண்ணங்களின் விரிவில் எத்தனையாவது நிறமடி நீ,, எண்ணி பார்க்க கண்களும் இல்லை ,, ஆகாயம் கூட ,,சின்னதாய் போகுமடி ,, உன் நெற்றி நீ சுருக்கையிலே ,, வதனம் கொள்ளும் மரணம் ,,, மண்டியிட்டு வீழுமடி ,, பாசக்கயிறும் உன் கழுத்தில் பாசி மணியாய் ஏறுமடி ,, ,, முழங்காலுக்கும் முகத்திற்கும் இடையே தூரமும் கூடுதடி ,, முன்னே நீ நிற்கையிலே ,, மத்திய வெயில் கூட ,, மண்டையில் மழை பொழியும் , மாலை இருள் கூட ,, பளிச்சென்று ஒளி வீசும் ,, உழி கொண்டு செய்த உருவமோ ,, உயிர்கொண்டு செய்த புருவமோ ,, அத்தனை ஜாடையடி ,, உன் புருவ பேசுதடி ,, அடக்கியும் நீ பேசிட வேண்டாம் ,, ஆயிரம் பதில் சொல்லும் உன் கண்முன்னே ,, வீணையின் வாசிப்பு அடங்கும் நொடியில் ,, உன் குரல் ஒலிக்கும் ,,, என்ன ஒரு பொருத்தம் நடந்திடும் வீணையோ நீ ,, காதலெனும் புதுமொழிக்கு அர்த்தம் தந்தவள் ,,, கடற்கரை மணலினே நண்டு நடையிட .. பிடிபடுமோ ,,என் மனம் ,, வலையிடையே சிக்கிய மீனாய் நான் துடிக்க ,,

இமை இடையே ஊசியாக நீ ,

இமை இடையே ஊசியாக நீ , என் தாயின் கருவறை நான் கிழித்து பிறந்தது உனக்காக தான் என்று நினைத்து இருந்தேன் ,,, கண்களுக்குள்ளக சொற்பனம் போலவே என் நெஞ்சில் மலராய் நீ விழுந்தாய் மரமாய் ஏனடி வளர்ந்தாய் ,, எழுதாத எத்தனையோ கவிதைகள் உன்னை கண்ட நொடியில் சிதறி விழுகின்றன,, கண்ணாடி துகள் போலவே ,, வசியம் வைத்து இழுத்திட என்னதான் அவசியமோ உன் கண்களுக்கு ,,, நவீனம் ,,,இழுத்து சாய்ப்பதே உன் கண்ணுக்கு வேலை போலாயிற்று ,, ஆழம் தெரியாமல் கால் விடுவது தவறென்றால் ,, உன் கன்னக்குழியில் மூழ்கிய எனக்கு என்ன தீர்வு ,, விஷத்தின் மறுபெயர் நீ விலகி செல்வதோ ,,, எத்தனை முறை தான் சாவது ,,, பிரசவித்த பட்டாம்பூச்சியின் வண்ணத்தை போலவே தினம் தினம் ,, புது புதிதாய் உடுத்துகிறேன் ,, நீ பார்க்கவோ ,,, உன் கண்கள் ரசிக்கவோ ,, வெட்கம் இன்றி சொல்லிடும் என் வாயிற்கு கூச்சமில்லை ,,, உன்னை பார்த்த கணம் நான் விழுந்தேன் என்கிறது ,, வெள்ளை காகித மனதில் உன் பெயரை பதத்து அமைதி காக்க செய்வது ஏனோ ,, வரலாறுகள் பேசிடும் பழந்தமிழ் போலவே ,, உன்னை கண்டிடும் எனக்கு புலப்படுவதில்லை ,,, ஏனோ புரியாத ம

கால் காெலுசு அடங்கும்;

ஆசைகளை  ஒட்டுமொத்தமாக மூட்டை கட்டி என்மேல் பொத்தென போடுகிறாள் என்னாவேன்,,, இதயம் துடிப்பது மெதுவாகும் ] அவள் இருக்க என்னை அணைக்கையில் அத்துனை பாசம் ,, சிலநேரம் கோவம் மூடிவிடுகிறது பாசத்தை ,, வெளியேவரும் தருணம் முதற்கொண்டு ஆடை சரிபார்க்கும் புராணம் தொடங்கிவிடும் ,,, எனக்கென வாழும் தேவதை ,, எழுதிய வார்த்தக வாய்  விட்டு பேசுமோ ,,,அதிசயம் ,,, நடக்கிறது ,,, திருவள்ளுவர் எழுதிய இருவரி உன்னதம் நீ என புரிகிறேன் ,, சிலநேரம் புரிகிறாய் பல நேரம் உட்சொல் தெரியாமல் குழம்பிட வைக்கிறாய் ,, எதுநான் சொல்லிட ,, எதை நான் விட்டிட ,,, சொல்லி முடிக்க ஆயுல் போதுமோ ,, வாழ்ந்து பார்க்க பல ஜென்மம் கூடுமோ ,,, விடை தெரியாத பொழுதுகள் இருக்கும் வரை வினாக்கள் நீளும் அதுவரை சண்டைகள் பொழுதுபோக்காக வந்து செல்லட்டும் அவள் செல்லமாய் என்னை கொஞ்சிட ,,, பைத்தியம் தான் உங்கள் மனதின் பேச்சு ,, என்ன செய்வது ம காதலித்து பாருங்கள் ,, உங்களுக்கும் இதே நிலைதான் , வஞ்சமாய் புகழவில்லை அணிகளில் கூடவும் அவளை திட்டிட விரும்பவில்லை ,, போகட்டும் ,,,காலம் மூன்று முடிச்சுகள் இருகட்டு

கால் கொலுசு சத்தம்

Image
சத்தியம் செய்தும் நிரூபணம் ஆகாத உண்மைகளின் இருட்டில் உன் காதலும் சேருமோ கண்டதும் காதல் பிறக்க அவ்வளவு அழகு இல்லை , என் மனம் நீ கண்டதில்லை ! என அறிகிறேன். ஆசைகளின் வடிவில் தான் ஏமாற்றம் என்பதை அடிக்கடி நீ விலகும் கணம் எல்லாம் உணர்கிறேன் , மற்றொரு கண்டம் குடியேறும் அளவு கவலைகள் சேரும் நிலையில் மீண்டும் திரும்பும் உன் குரல் நிலையால் திகைக்குமோ என் உயிர் , நிலவுகள் தேயும் அதே நாளில் தான் உன் அன்பும் தேய்கிறது நிலவில்லா பொழுதில் பைத்தியம் பிடிக்கும் என்ற கூற்று உண்மைதான் அவள் சாலையில் நின்ற மாலை நேரம் கண்களை இருக்க மூடும் சொற்பனம் கண்ட கணம் வழுக்கி விழுந்தேன் சாலையும் என் கீழ் விழுந்தது சாலைக்கு வந்த மாரடைப்பில் நான் பிழைத்தேன் நல்ல வேலை வாகனம் தப்பித்தது அவள் அருகில் நின்ற மரத்தினில் மோதி! மோகபுயல் என் மனதில் கொழுந்தாக வளர கிள்ளிவிட்டது அவள் சினங்கொண்ட பார்வை ! மருந்தளிக்க கூட முடிவதில்லை உடல் வலி நீக்கி மனவலி தந்து விலகியவள் பாதம் தடம் என்னை பார்த்து ஏளனமாய் சிரித்திட உடைந்து போனவனாய் அவள் தடங்களின் மேற்கூரையில் என் முகம் வைத்து அழுக

கால் கொலுசு. 1

கால் கொலுசு , கனவு சோலைகளின் மறைவின் நிழலில் உறங்கிடும் வண்ணத்து பூச்சியின் பட்டு மேனி திரும்பிடும் கணம் ,, என்னை மறந்து நான் வியந்தேன் ,, காணாத ஒரு அழகு கண்முன்னே வந்து நிற்கையில் அசையா சிலை ஆகிறது என் கட்டுடல் , சிலை என்று நடக்குமோ வந்த பகல் கனவு பலித்து போனதாக ஒரு கனவு ,, நிஜங்களின் மார்பில் துயில் கொள்ளும் பொழுது புரிவது இல்லை  ,,, எல்லை மீறி அடிக்கும் காற்று பிரிக்கும் என்று தென்றல் தேடி வந்ததோ தூதுவன் அனுப்பி வைத்ததோ நாரதன் நடத்தியதோ எதுவென புரிவதற்குள் ஏகாந்தம் என்னோடு சேர்ந்து கொள்கிறது ,, உச்ச பட்ச அன்பு எதுவோ அதனை சேமித்து வைக்கிறேன் ,, ஆழ்மனத்தின் ஒரு பக்கத்தில் கானம் கண்ணீரோடு இசைக்குமோ சோகத்தின் பிடியில் சிக்கிய மயில் போல ,, துடித்து விடுகிறது மழை எல்லோருக்கும் படைப்பது ஒரு இதயம் தானே திடீர் என ஒரு கேள்வி இதயத்தில் மொத்தம் நான்கு அறைகலாம் ,, ஒரு அறையில் கூட இரத்தம் சேராமல் ஏனோ ஒரு வித்தியாச  நிலை நீ வந்து நிரம்பியதால் இருக்குமோ ,, நின்றும் தொலையாமல் தவிப்பெடுத்த தருணம் ,, அர்ச்சனை தட்டுகள் இல்லாமல் செய்யும் ஆரதனைகளின்

ஒற்றை வழி பாதை

ஒற்றை வழி பாதை கானம் கேட்டிடும் தருணமெல்லாம் கனவின் நிழல் கண்முன் நடனமாடும் நேரம் ,, கணக்கில்லாமல் நீள,, எதோ புரியாத மொழியினை பொழிந்து செல்கின்றன பேசாத மேகங்கள் , வாமணன் தேசத்தில் மூண்ட கோவமோ என்னவோ ,,, நீர்த்துளி தவிர்த்து அக்கினி மழை குளிராய் என் வானில் ,, அற்புதங்கள் தினம் நடக்கும் தெரியாத உறங்கும் பொழுதில் கண் இமைக்கும் வலிக்காமல் ரத்தம் உருஞ்சும் அழகு அரக்கி ,, கிழித்து கிழித்து இமைகளின் போர்வையை அறுத்து ,,,உள் நுழைந்து என் உறக்கம் கெடுப்பதில் என்ன அற்ப இன்பம் உமக்கு , பொடிநடையாய் நான் யோசித்த நாட்களை சாலையில் கழித்து இருந்தால் விமானம் இல்லாமல் வேறு நாடு சென்று இருப்பேன் , வகை வகையாய் உணவினை விரும்பின என் நாவுகள் செத்து போயின , காதல் காதடைக்கும் கணம் ,, வேர்க்குரு போலவே என்னை குத்துகிறாய் எரிக்கிறாய் ,, ஆனாலும் என்ன அக்கறை அழகு பார்த்திட ,, உன்மேலும் தூவுகிறேன் வாசம் வீசும் வாசனை பொடியினை ,, அமைதியாக இருக்கிறாய் என நினைக்கிறேன் ,,ஆழ்மனம் பயபடுகிறது ,, எதிர்கால சேமிப்போ என ,, நமக்குள் சண்டை வருவதில் எனக்கு எந்த கடினமும் புலப்பட

சொல்லமுதே

சொல்லமுதே விண்மீன் செதுக்கிய பெண்மீனே . வால்மீன் தொடுத்த கண்மீனே .. வாழ்த்தாத உன் பெயரை கூறாது வாயும் உண்டோ ,, பவளதாமரை மலரே ,, பனிக்குள் பூத்த பங்குனியே ... பல்லாக்கில் செல்லும் பாதமே ,, விடை பெரும் காற்றே , விரும்பாத சுவாசமே ,, வித்தியாசம் காட்டும் உருவமே ,, விளையாடும் அழகே .. சிகரங்கள் தொடாத கண்விழியே ... எரிமலை சீண்டாத .. கரு மழையே . திகட்டி போகாத அமுதமே மதில் கட்டி காக்கும் உன் சேலைகளின் வானத்தில் .. முந்தானை முடிச்ச்குகளின் பிரதேசத்தில் பிரவேசிக்கும் வியர்வையின் எதிரியாய் என் பார்வை ,, மஞ்சள் பூசிய மேகங்கள் கண்டதுண்டோ ,, குங்குமம் வைத்த வானவில் தான் உண்டோ ,, தாமரை மருதாணி பூண்டதுண்டோ ,, வெள்ளை பனித்துளிகள் தங்கம் அணிந்தது உண்டோ .. எத்தனை எத்தனை அழகுண்டோ ,, அத்தனையும் மொத்தமாய் என் முன்னே ,, அடியே உன் அழகினிலே அடியேன் ஆக்கிடும் பேர் ஒளியே ,,, யாழ் இசையே ,, மெயதீண்டும் உன் கூந்தல் வாசத்தில் கொஞ்சமாய் சாகடித்து விடு ,, நீ புள் மேல் நடக்கயிலே ,, என்மேல் மிதித்து விடு ,, காதல் சொல்லும் என் மன கடற்கரையில் உன் பாதங்களின் தடங்களை ம

கள்ளிக்கு ஒரு மடல்

கள்ளிக்கு ஒரு மடல் புதிதாய் துளிர்க்கும் இலன்செடி போலவே காண படுகிறேன் ,, கண்ணாடியின் உடைகொண்டு எதோ மாற்றம் நிகழ்வதை அறிகிறேன் ,,,என் முக நாணம் நான் கண்டு ,, நெஞ்சுகூட்டின் சுவற்றின் மறுபக்கம் துடிக்கும் இதயத்திற்கு மாற்றாக .. மற்றொரு சப்தம் .. உன்  பெயராக இருக்குமானால் ,, ஒளிக்கும் மின்னலை கூட எளிதாக கையாளலாம் போலிருக்கிறது நங்கையை ஒப்பிடும் பொழுது ,, வானவில் கண்டு மயங்காத என் விழிகளும் பொய்யாகி போயின , ஒற்றை நிற வானவில் நடந்து போகையிலே ,, இருளின் ஆதிக்கம் அதிகமாக ஆக உந்தன் உருவம் நிழாலாய் என் கண்ணின் முன்னே ,, இரவின் வெளிச்சம் காண்கிறேன் இருட்டு அறையிலே ,,, உன் நினைவும் நானும் தனிமையில் ,, ஊடல் காணும் பொழுதுகளை மட்டுமே எதிர்பார்கின்றன சோடை போகாத என் மனதும் ,, அமிர்தம் தித்திக்குமோ கசக்குமோ என அறியாமல் .. தடவி சுவைத்து பார்க்க தூண்டும் ஆர்வம் ,, எல்லைகள் இல்லாத தேசம் ஏதும் இல்லை என அறிவேன் ,,என் காதல் வரும் முன்னர் .. தீமைகள் ஏதும் புரிந்தது இல்லை ,, திருட்டுத்தனம் அவ்வளவாக நடந்தேறியதில்லை , உன்னை ஒளிந்திருந்து பார்த்தல் நடக்கும் வ

சாதல்

கண்ணீரோடு கவலையும் செல்லும் வழியில் தான் வருகை தருகிறது தைரியம் எனும் கைப்பிடிகள் ,, காதலின் கட்டுகள் உடைக்கும் தருணம் வரும் வரை கழறாமல் இருக்கிறது அந்த நிமிட ,,உணர்வுகள் ,, எதோ எதோ என விழிகளின் கோலங்கள் கண்ணீரால் சுத்த படுத்தபடுகின்றன ,, மழையும் விழி மழைக்கும் போட்டி போல இருக்கிறது ,,, விழுவதை நிறுத்தமால் ,, சில நேர காவல்கள் கூட ,, அர்த்தவனம் ஆகிட ,, இமைகளுக்கு உள்ளே இமைக்காத இரு கோலங்கள் , இழுத்து கொள்கிறது என் மொத்த உலகத்தையும் ,, சொற்கள் காயபடுத்துமோ ,, படுத்துகிறது அனுபவிக்கிறேன் ,,, எல்லைமீறாமல் இருக்கும் வரைதான் அன்பிறகு கூட பாதுகாப்பு ,, கைகளில் கைப்பெசிகளுடன் காப்புகள் இடப்படும் பொழுதே கழுத்தினில் துன்பத்தின் தூக்குகள் முடிக்கப்பட்டு ,,தல்லாமல் இருக்கின்றன ,, ஒவ்வொரு பிரிவின் பொழுதும் ,, இருக்கப்படும் நினவின் அலைகளுடன் ,, இறுக்கப்படும கயிறுகள் ,, தோள்களின் நிலைகள் கூட சாயக்கூடும் ,,வராத பழக்கங்கள் அனைத்தும் வீடு வந்து சேரும் ,, வருந்தாத நாட்கள் மொத்தம் சேர்ந்து வருத்தும் ,, ஏணி படிகள் இல்லாமல் நரகம் நம்மை அழைக்கும் ,, காதல் சாதலுக

முற்றுப்புள்ளி

முற்றுபுள்ளி நைவளம் செல்கிறது ,, பொய் வான மேகங்கள் ,, மந்திர நிமிடங்கள் மெதுவாக ஓடிட ,,, நல்யாழ் தீட்டும் விரல்கள் ,, நிறுத்தும் ஓசையினை ... இலங்குழல் ஓட்டைகளில் என்னவோரு ஆனந்த ராகம் ,, மெய்த்தமிழ் நான் சொல்ல ,, பொய்யாகுமோ அச்சத்தில் ,,, நாணம் அடைக்கிறது என்  தொண்டையினை ,, இருபது வருடம் காத்திருந்த காலத்தின் தவம்தான் இருள்கூடும் ஒளியாய் என் தேவதை ,, வண்ணங்களின் விரிவில் எட்டாம் நிறமாய் நீ இருப்பாய் ,, இசைகளின் லயத்தில் ஏழாம் சுருதியை நீ தெரிவாய் , மரண பள்ளத்தாக்கு என்னை அழைக்குதடி ,, உன் கன்னத்தின் குழி விழவா ,, மோகத்தின் மொத்த்த வடிவம் சிரிக்குதடி ,,இதழ்ப்பனி பிரதேசம் ,, கிறுக்கியை போலவே முதல் நான் கண்டேன் ,, சிறுக்கியே காலமே , காதல் நான் கொண்டேன் ,, எதில் எதுவோ அதில் இதுவோ .. புரியாமல் உலரும் வாக்குகள் வீணாகி போகுமோ ,, இதம் தேடும் என் கண்களின் இமைக்கு என்ன பதில் நான் சொல்ல ,, உன் பெயர் சொல்ல அடங்குமோ , மரம் தாவும் குரங்கை  போலவே மனதை தேடுகிறேன் ,,, விழியின் மேல் உயிர் வைத்து ,, கறவாத பாலாக உந்தன் முகம் ,, தடைபோடும் ஒரு குச்சி எந்தன்

தாெடக்கம்

தொடக்கம் துளிர்க்கும் இலையிடம் ஒரு ஒப்புதல் ,, என்னவள் மலர்கையிலே ,, மறைக்காமல் விலக சொல்லி ,, சாயும் பொழுதுகள் ,, தொடங்கட்டும் மறுபடி ,, அவள் கைகோர்த்த கணம் தோன்றும் நினைவிது ,, இடம் பொருள் ஏவல் தனிமையின் உருவகம் மனதிடையே கேட்கும் பதில்கள் ,, கேளுங்கள் விடியற்காலை தான் ஒளிரும் சூரியன் தான் ,, இமைகள் கூட கூசவில்லை , காரணம் காதலி[இ]டமே ,, கரணம் தப்பினால் மரணம் காதலில் கூடுமோ இவார்த்தை,, சொர்கத்தின் எல்லையும் மரணத்தின் வாசலும் கூடுமிடம் தான் ஊடல் என்கிறது [கவி]தை கணிப்பு ஜீவிக்கும் அத்தனை உயிர்க்கும் இயல்பென்றால் ,, வெற்றி வாய்ப்புகள் மட்டும் குறைவது ஏனோ ,, துன்ப இன்ப கலவை  என்று தெரிந்தும் அள்ளி எடுத்து நெஞ்சிலே புதைக்க அத்துனை அவசரம் ,, சரளமாக பேசிடும் வாக்குகள் கூட , குழம்பி போகிறது ,, அவள்தலை காதல் கூறும் நேரம் ,, நிதர்சனம் என்று புரிந்தே ,, விதைக்க படுகின்றன ,, பிரிக்க நேர்கையிலே ,, வேருடன் அறுத்து கொலையாகிறது ,, பல உறவின் வேர்முடிச்சுகள் ,, சாதியின் பெயரோ ,, மதத்தின் துணி உடுத்திய , மனமில்லா பிணங்களோ ,, எதுவோ பிரிக்கிறது ஊரு

விரசாய்

விரசாய் பங்குனி வெயிலு மண்டையிலே அடிக்கையிலே ,, மனசுக்குள்ள குத்திடும் அவ உருவம் ,,, சீக்காழு கொண்டையிலே என முடிஞ்சு போறவளே ,, கண்ணுகொரு மைய வெச்சு ,, காலுக்குனு கொலுசு செஞ்சு , மெதப்புல பறக்குதம்மா ,, உன் சீல வானுயரம் ஏதும் இல்ல ,, கெண்ட காலு மண்ணுக்குள்ள ,, புதையாம நீயும் போக ,, மெதுவாக ,,,உச்சி வேற்குதடி ,, சாம விறகாக ,, என்னையும் எரிச்சுட்டு போற ,, கோல புழுவாய் என்னையும் வைப்பவளே ,, மண்ணும் விண்ணும் மாறுதடி ,,பாத சுவடும் தேயுதடி , சிலம்பு கொம்பாக ,, என் பார்வை சுருங்கி போக ,, நேர முள்ளாக ,, என் மனச தைக்குறியே , மேற்கே நீ செல்ல ,, மேகமும் ஒன்னு கூட ,, மழைவர போகுதுன்னு பார்க்காமே சொல்வேனே ,, விடியும் ஏற்பாடும் ,, எழாம என்ன தள்ள, குளிரும் உடம்பாக ,, கோட வெயில் போகுதடி , பசும்பால் கழுத்தோ ,, ஒத்த மணி அணியோ ,, உதட்டு ஓர் வளைவோ ,, விழுகும் கண்ண குழியோ ,, மறையும் இமையோ விரியும் புருவமோ ,, எது என்ன இழுத்துனு போச்சுன்னு இதுவர புரியலடி ,, என்னதான் காரணம் சொல்லுற ,, எதுவர போகசொல்லுற ,, தெளிவாதான் சொல்லடி ,, என் மனதிலே ,, குடிசை கோபுரம் என

வண்ணத்து பூச்சி

வண்ணத்து பூச்சி உருமிடும் வாகன  புகையிலே வண்ணத்து பூச்சியின் உடைமை அழுக்காக்க  படுவதில்லை ,, எந்த ஓவியன் தீட்டிய உயிரோவியமோ ,, பறந்து செள்கிறது மெல்ல காற்றிலே , தன்னை தானே அடைத்து வாழும் குணம் உனக்குமா நிறம் நிறமாய் இருக்கின்றாய் , இருந்தாலும் ஒரே பெயர் ,, யார் வைத்தது இப்பெயர் , ஒரு கண நேரம் போதும் உன்னை கண்டு நான் வியக்க ,,,விசித்திரம் ,, சரித்திரம் பேசிடும் வாக்குகள் இடையே இடையிடையே ,,,பேச்சினை கலைக்கிறது உன் அழகு ,, பெண்ணுக்கு பதில் உன்னை கட்டினானோ அக்கடவுள் இக்கணம் என் முன்னே ,,, நிஜமாய் உணர்கிறேன் ,, எளிதில் கடக்கும் காற்றிற்கும் அழகை சேர்க்கிறது உன் சிறகு ,, எத்தனை கற்பனை ,, எழில் கொஞ்சும் நிறமிகள் குடிகொள்ளும் தோகை வடிவினிலே , இருப்பிடம் ஏதும் இல்லாமல் திரியும் உனக்கோ இவ்வளவு அழகு ,, கற்பு தொல்லை இலையோ ,,, விரல் நுனி வானவில் பிடிக்க இயலாது வண்ணங்களின் வாசனை விருப்பத்தின் மொத்த உருவம் ,, கண்டால் உயரும் புருவம் ,, காதல் துளிர்க்கும் நொடியில் தோன்றும் அற்புத உவமை உருவகம் செய்ய உருவாக்க பட்ட ,,உன்னதம் ,, எத்தனை ,மலரின் தேன

இருவரி கடிதம்

இருவரி கடிதம் என் மூச்சு காற்றினை எடுத்து கொண்டு எந்த நிலவில் கால்தடம் பதிக்க இவ்வேகம் , குறிவைத்து தகர்ற்கும் துப்பாக்கி பார்வையிலே துளையிட்டு உன் அன்பால் நிரப்பினாய் , எதற்கு தூங்குகிறாய் என என் இமையில் குடியிட்டு கொள்[ல்]கிறாய் ஏங்கும் மனதிடம் ஓடிபிடித்து விளையாடுகிறாய் தோற்றுபோவது ஒவ்வொரு முறையும் நானே ,,குருடனாக \ செந்தேள் கொடுக்கினை இதுவரை கண்டதில்லை ,, கோவமாக நீ வையும் வரை . அலைபேசிக்கு என்ன ஒரு அழைப்ப்பு வந்ததோ காயச்சல் வந்து ,, உன்னை மேலும் பிரிக்கிறது ,, தெளிவுபடுத்தும் வார்த்தைகள் ஆயிரம் காதில் விழுந்தாலும் மறுகாதில் வெளிபடுகின்றன,, மனதிடம் தினமும் சண்டை இடுகிறேன் ,, எல்லா முறையும் என்னை மட்டும் துன்பத்தில் அழுத்துவது ஏன் என்று துடிக்கும் இதயம் கேட்டு கேட்டு துடிக்கிறது ,,அவளிடம் இருந்து அழைப்பு வந்ததா என்று ,, செத்தே போகிறேன் அடியே ,, இழுக்கும் உன் நினைவின் தூக்கினிலே ,, தனிமை என்மேல் மோகம் கொண்டு கட்டி அணைக்கிறது ,, தேங்கிடும் சிறுகுளம் ஆகுமோ என் வீடும் .. கண்ணீரும் தீர்ந்து போனதே வெறுக்கும் நொடிகள் ,, என்னை பார்த்

ஒரு விடியல்

உலகில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை உன் பெயர் ,, கருவறை வேண்டும் என நான் கேட்பது ,, நான் தங்க அல்ல ,, என்னவளை தங்க வைத்திட காலம் கடந்தும் பேசட்டும் என் காதல் கதையினை ,,கட்டுகிறேன் இருதயம் பிளந்து மண்டபத்தை , போய்ச்சொல் அவளிடம் முடிக்கும் தருணத்தில் என் உயிர் அவளுக்காக இருக்குமென அணு அணுவாய் ரசிக்கிறேன் பிரமிப்பாய் உணர்கிறேன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முறையும் புதிதாக தெரிகிறாய் என் கண்ணில் மட்டுமோ \///??? வயிறு பார்ப்பதால் நிறையுமோ உன்னை பார்ப்பதால் பசியும் மறையுமோ வார்த்தைகளில் விஞ்ஜானம் புகுத்துகிறேன் உன் குரலில்  கேட்கும் இசைகண்டு .. இலைகளின் மறைவினை தேடுகிறேன் , பகலவன் ஒளியாய் நீ என்னை தாக்கையிலே குழந்தையாக நினைக்குறேன் முடியவில்லை ,, சாக்கிலாவது உன் மடியில் தவழ உலகில் மிகவும் காதல் எங்கு வசிக்கிறது என்பதை தேடுகிறேன் போட்டியிட அருகில் இருந்தும் தொலைவை உணர்கிறேன் துளைத்து போன நினைவை கொண்டு ] வேறு என்ன வேண்டும் சொல்கிறது மனது ,, உன் ஒரு நெற்றி இடை பொட்டாக அசல் ஆசைகளை மட்டும் உனக்கு காண்பிக்கிறேன் , மற்றவை திருமணம் பின்பு

ஊடல் மோகம்

ஊடல் மோகம் இயல்மனம் ஏதுமின்றி ,, துடித்திடும் மீன் போலே ,, இரு கண்ணும் துடிக்க ,, கனவாக வருகிறான் ,, கணவனாக வர போகிறவன் ,, சிறை செல்லும் எந்தன் தைரியம் அவன் பார்வை முன்னே ,, என் அருகே அவன் இருக்க ,, என் உரிமை அவன் குடிக்க ,, ஆட்சேபனைகள் ,, ஆத்மார்த்தமாய் ,, ஒதுங்கி கொள்ளும் ,, அழகாய் அவன் மீசை , குறுக்கே ,,சதையின் இடுக்கே, சவரம் செய்திடாத ,, தாடியும் ,கன்னத்தில் மெதுவாய் விழும் குழியும் , மெய் மறக்க செய்திடும் செயல்கள் ,,என் மடியில் அவன் உறங்க ,, கருத்தரிக்கமலே தாயகிறேன் ,,தாடிவைத்த குழந்தைக்கு , வேறு என்ன வேண்டும் என வினவிடும் முன் ,, சற்றென்று ,,சைவ முத்தம் சாரும் கன்னத்தை ஒரு நிமிடம் ,,உலகம் நின்றுவிடும் அவனின் அந்நிமிட ,, இதழாலே என் கைகள் தடுத்ததும் இல்லை , அவன் கைகள் நுழைந்ததும் இல்லை , எத்துனை கண்ணியம் காதலில் கூட , கடைசி வரை வருவேன் என இவர் கூறிய வரிகளில் செய்யும் காரியம் புரியவைக்கிறது ,, வருவாய் என ,, நண்பனாய் வந்தாய் காதலாய் மாறினாய் ,, அது மட்டும் இன்றி அன்பினை காட்டி சிலநேரம் தாய் தந்தையாக கூட தெரிந்தாய் , ஒற்றை உருவத்தை த

ஊடல் காற்று

ஊடல் காற்று மாசி மாதத்தின் ஒட்டுமொத்த காற்றும் எனக்கெனவே அடிப்பது போல் ஒரு வர்ணனை அந்தரங்க மனதிலே ,, அழுக்காறு குணம் விதைந்து விட்டதா என புரியாத நிலை ,, இதுவரை கண்டதில்லை இத்தனை அழகை ஒரே குவியத்தில் , சிந்தனை செய்தால் கூட ,, மீள இயலாத கனவு , கதிரவன் கண்ணை மூடி வெட்கபடுகிறதோ என்கிற தோற்ற பாவனை , முகம் கொடுத்தும் பேசிடாத உன் விருப்ப வலையிலே என்னை மட்டுமே நுழைய விட்டாய் , நுழைந்தும் விட்டேன் , இருக்க இடம் கொடுத்தல் மடியை பிடிக்கும் கதையை போல் ,, நண்பன் நிலையில் இருந்து படி உயர்ந்து ,,காதல் தேசத்தில் உன்னையும் என்னையும் மட்டுமே பூட்டி விட்டு சாவியினை தொலைக்க நினைக்கிறேன் ,, பகல் கனவோ ,, பகல் நிலைவை போலே என் பார்வையில் மட்டும் பளிச்சிட ,,அத்துவனம் ஆகின்றன ,,, ஒரு நொடி போதும் என நினைத்து வந்தேன் ,, எரிமழை பொழியுமோ ,, பனித்துளி தூருமோ உன் விழிவழி சாலையில் திங்கள் தினம் தான் ,, பகல் பொழுதுதான் ,, தயக்கத்தின் உச்சியிலே ,, மாலை ஆகும் மங்கும் ஒளியும் ,, உனக்காகவே அழைக்க பட்டது போலவே அழைக்காமல் வந்து கொள்கிற பயம் ,,நிஜம் தான் இக்கணம் கில்லி

ஊடல்

ஊடல் தெரிந்தெ தொலையும் விழகளின் முன்னே ,,என்ன நான் சொல்வது புதைமணலா உன் கண்கள் பார்த்ததும் என்னை இழுத்து தள்ளுகிறது ,, என்ன தான் வசியம் செய்கிறாய் ,, கூந்தல் ,, அய்யயோ ,,,பிரம்மன் சிரமம் எடுத்து செய்த கார்முகில் மேகம் ,,, வஞ்சனை பாடும் ,, வானமும் ,,நீ செல்ல நேர்கையில் , வெளியிலே கண்கள் ,, அடடா ,,,காந்தம்  கொண்டு செய்ததோ ,,,கரிகாலன் கட்டிய ,, கல்லணை என்ன வலியது இவள் பார்வ்வையின் முன்னே ,, சிறுதுகள் ஆகும் கதிரவன் வெளிச்சமும் ,, புயலென வீசும் ,, சிருதழல் கோவமும் ,, குளிரால் வாட்டும் ,, ராட்சத அன்பும் ஆகாயத்தின் ஒட்டுமொத்த அழகையும் ,,எவனடி செதுக்கியது ,புருவத்தின் கீழே , முகம் ,, எழுத முடியாத கண்ணாடி ,, பிரதிபலிக்கும் ரசனை ,, விண்ணை மிஞ்சும் வடிவம் , எழிகொஞ்சும் பொலிவு ,, அத்தனையும் ஓரம்தள்ளும் ஒற்றை மச்சம் ,, இரு இதழ் கடத்தும் என்னை ,, உவமைகள் ஏதும் இன்றி இப்படியா தவித்திடிடுவேன்  ,, ஒரு கவிதை போதுமா ,, உன்னை வெளிபடுத்த ,, இல்லை வானமும் துளிதான ,,உன்னை பற்றி நான் வரைந்திட ,, வரைவோலை போலவே மாறுகின்றன ,, உந்தன் கைஎழுதுகளும் ,, மின்னலை மிஞ்ச