Posts

Showing posts from December, 2018

கண்மணியே -3

Image
போர் நடத்தும் அகிம்சை விழிகளில் வீழ்ந்தது என் மனம்  அறவழியில் படுகொலை நடத்தியதோ ? அண்ணார்ந்து பார்த்திடாத அன்னபறவையே அருகே நீ இருக்க எனக்கேன் இவ்வுயிர் வினாகேட்டு விடைதரும் உன் அமைதிக்கு என் மூச்சுகாற்றும் கனா கண்டு நிகழ்வான இன் கணத்திற்கு என் கண்ணீர் துளியும் பதிலுரைக்கும் .. சுவர்க்கம் தேடுகிறேன் அவள் விரலிடையே விரல்பதித்து சுவர்க்கம் தேடுகிறேன்  அவளோடு, விளக்கொளியில் விண்மீன் போதும் சிரித்துகொள்ள சிறுகடி போதும் அமர்ந்துகொள்ள செந்தரை போதும் அருந்திகொள்ள அமுதமும் போதும் , அவள் மட்டும் என்றும் போதும் . தொடரும் ..

கண்மணியே -2

Image
கண்மணியை கண்டதாலோ கண் மணிகளுக்கும் துயில் தொலைவுற்றதோ ,  விடிகாலை வான்கூட உன்காலில் தவழுமடி  சற்றே வெளியே நில் . வாசலில் கோலம் . மணித்துளிகளோடு சேர்ந்திசைக்கும்  என் இதயச்சத்தம் வீதியில் நீ  தொலைவில் நான் . வண்டொன்று வெண்மேகம்  சேர்ந்திடுமோ  வீணென்று நான் சேர்த்த கணங்கள் கரைந்திடுமோ கனவுக்குள் சிறைப்பட்டு தவிக்கின்றேன் சற்றே இமைதிற எனை காண்... இவ்வாழ்வேன்று நான் பார்ப்பது அதுவே ,,