Posts

Showing posts from 2021

சருகு -கவிதைகள்

திசையறியாத சருகின்  நுனியில் வீடொன்று கட்டி நாடோடியாவோம் வா விளக்கொளியில் துளியெடுத்து  நிலவொளி செய்வோம் ,  அதில் நீருடுத்தி நாம் குளிப்போம்  காற்றில் கதையெழுதி  கண்ணில் திரையோட்டி  வானில் படம்பார்ப்போம் வா  கவியரசன் மனோகரன் .

நல்லை அல்லை - 1

Image
 கானல் நிலத்தில்  ரயில் பூச்சியின் கால்தடம் ! கண்டுகொண்டு கடந்தவன் எவனோ  விம்மி விரைந்த வானத்தில்  விளக்கேற்றும் வரை  காத்திருக்குமோ கற்றை ஒளி  சிகப்பாய் கருப்பாய்  பளபளப்பாய் சில்வண்டு  சீறிபாயும் தென்றலிலும் .  பஞ்சை உதிர்த்து பட்டுடையாக்கி  பயிர்செய்யும் நிலம்போல  வனன்தவள் அவளோ  எவன் செய்தான் மழை ! இவள் இப்படியே இருந்திருக்காலம்  உன்னால் !!!!!!!!!!! நல்லை அல்லை .

சுவாசமாய் அவள் - Swasamaai Aval - Tamil Love kavithaigal

காற்றின் வேகத்தில் உன் கால்தடம் கலைந்ததோ  கானல் நீரிலே கான்முகம் வரைந்ததோ  வெள்ளை வானிலே வெற்றிடம் நிரம்பியே  வீட்டில் மடிமீது வளைந்து கொண்டதோ  விழுந்த ரோசாக்கள் எழுந்து நிற்குமோ  அழுந்த மனம்தன்னில் சிரித்து சொக்குமோ  கொள்ளை மாந்தரில் தனித்து நின்றும் நீ  அல்லை கூந்தலில் அமிழ்ந்து செல்லுமோ !