மஞ்சள் நிலவு இதய நாளத்தின் இடையே ஒரு அழகான கோடு. வரும் உதிரம் உன்னை தொட்டு குளிராய் போக ,,,விறைத்து போவேனோ உரைத்து சாவேனோ ,,, வண்ணங்களின் விரிவில் எத்தனையாவது நிறமடி நீ,, எண்ணி பார்க்க கண்களும் இல்லை ,, ஆகாயம் கூட ,,சின்னதாய் போகுமடி ,, உன் நெற்றி நீ சுருக்கையிலே ,, வதனம் கொள்ளும் மரணம் ,,, மண்டியிட்டு வீழுமடி ,, பாசக்கயிறும் உன் கழுத்தில் பாசி மணியாய் ஏறுமடி ,, ,, முழங்காலுக்கும் முகத்திற்கும் இடையே தூரமும் கூடுதடி ,, முன்னே நீ நிற்கையிலே ,, மத்திய வெயில் கூட ,, மண்டையில் மழை பொழியும் , மாலை இருள் கூட ,, பளிச்சென்று ஒளி வீசும் ,, உழி கொண்டு செய்த உருவமோ ,, உயிர்கொண்டு செய்த புருவமோ ,, அத்தனை ஜாடையடி ,, உன் புருவ பேசுதடி ,, அடக்கியும் நீ பேசிட வேண்டாம் ,, ஆயிரம் பதில் சொல்லும் உன் கண்முன்னே ,, வீணையின் வாசிப்பு அடங்கும் நொடியில் ,, உன் குரல் ஒலிக்கும் ,,, என்ன ஒரு பொருத்தம் நடந்திடும் வீணையோ நீ ,, காதலெனும் புதுமொழிக்கு அர்த்தம் தந்தவள் ,,, கடற்கரை மணலினே நண்டு நடையிட .. பிடிபடுமோ ,,என் மனம் ,, வலையிடையே சிக்கிய மீனாய் நான் துடிக்க ,,
Comments
Post a Comment