சருகு -கவிதைகள்

திசையறியாத சருகின் 

நுனியில் வீடொன்று கட்டி

நாடோடியாவோம் வா


விளக்கொளியில் துளியெடுத்து 

நிலவொளி செய்வோம் , 

அதில் நீருடுத்தி நாம் குளிப்போம் 


காற்றில் கதையெழுதி 

கண்ணில் திரையோட்டி 

வானில் படம்பார்ப்போம் வா 


கவியரசன் மனோகரன் .



Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு