மௌனத்தின் வடிவம்
மௌனத்தின் வடிவம் கதிரவன் உதிர்த்த பின் தான் புரிகிறது பல உயிர்களின் உண்மை நிலை , அர்த்தவன காட்டிலே எதையோ தேடும் விலங்கை போல் , விடை தெரியாத உலகிலே அலையும் மனித சடங்கள் , கனவுகளுக்கும் கைகால் முளைத்தது போல் கண்களிலே அத்தனை மகிழ்ச்சி உதாரனமாய் ஒரு வாழ்வுவேண்டும் என்றால் தெருவோர இயல்பாய் , தினம் தினம் காணும் துன்பத்தை உடுத்தி அதிலும் இன்பம் காணும் ஒரு பிழைப்பை வாழு , சட்டங்கள் எல்லாம் விடுமுறை எடுத்தது போல எத்தனை விரோதம் வெளியிலே எல்லாம் வீசும் காற்றை போல் மறையுமென ஒரு நம்பிக்கை மனதிலே , இத்தகைய சுழலிலே எழும் ஒரு கணம் மௌனத்தின் வடிவம் ,