விமர்சனம்

விமர்சனம்
கனவுகளுக்கு கைவிலங்கிட்டு
கொடுஞ்சிறையில் அடைக்கும்
கொடியவன் தானே இவ்விமர்சனம் ,,

கற்பனையின் வடிவத்தை
அகங்குளிர செதுக்குவதும்
விமர்சனம் தானே ,

சென்னையின் சாலைகளில்
ஆடி கார் ஓடுவதும்
அறைவயிற்று பசிக்காக அலைய
வைப்பதும் விமர்சனம் தானே

முயற்சிக்காக முயல்பவனை
முடக்கி போடுவதும்
வாய்ப்புக்காக அலைந்தவனை
வாழ வைப்பதும் விமர்சனம் தானே

ஒன்றிணைத்து பேசபடுவதின்
தொடக்க புள்ளியும்
வெற்றி பெற்றவரை

வாய்குளிர வாழ்த்துவதும்
இவ்விமர்சனம் தானே

கண்ணெதிரே குளிர்ச்சியையும்
மறைமுக வெப்பத்தையும்
கொண்டிருக்கும் விமர்சனமே
எத்தினை கண்கள் தான் உமக்கு,,

நீ செய்த நல்லதை விட
பாவங்களே மிகுதி ,,,!
கல்லறையில் உள்ள பிணங்களுக்கே
அறியும் உண்மை குற்றவாளி
யார் என்பது ,,,தப்பி விட்டாய்
உனக்கு நல்ல நேரம் தான்

உனக்கோ உயிரும் இல்லை
உடலும் இல்லை
உருவம் கூட இல்லை
பிறகு எங்கு தான் ஒளிந்துல்லாய்
எப்படி கொல்கிறாய்
எப்படி அணைக்கிறாய் ,
எனக்கும் சொல்லி தருவாயா ,,,

ஒரு சொல்லிற்கே இத்துணை
குணமிருக்க ,மனிதற்கு
எவ்வளவு இருக்கும்
புரிந்து தான் பாருங்களேன்!!!

மாற்றம் நிச்சயம் .,,,,
புரிதலுடன் கவி .........

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு