காணாமல் போன வார்த்தைகள்

காணாமல் போன வார்த்தைகள்

இளந்தளிர் மேனியும்
இலையுதிர் காலமும் ஒன்றாய்
வரும் சமயத்திலே

வாடி அடிக்கிறது கோடைகாற்று ,
விழிகோலம் ஒன்றாய் மாற
எலெக்ட்ரான் பாய்ச்சல் மனதிலே பாய
என செய்வது துளை விழுந்தது ,,
அதில் இறங்கிவிட்டாள் அவள் ,
பேர்த்து எடுக்கிறாள் உயிரை
ஆழத்திலே இருந்து

ஆடைகள் சீராய் மாற
ஆண்மகன் பட்டம் வந்தது
அன்புகொடுக்க ஒருஜீவன்
அமைதியில்லாமல் அடம்பிடிக்கும் மனசு ,

திராவகம் போல்
அவள் மேனி என்னை உருக்கிட
காதல் கசிந்து ஒழுகியது
எரித்து எரித்து என்னை கொன்ற என்மனம்
அவளை நோக்கி பாய்ந்தது
உயிர்பயணம் வைத்து செய்தது வேலையை
வார்த்தைகள் ஒருவழியாய் விழுந்தன வெளியே

பாதி உயிர் அவளிடம் இருக்க
என்னிடம் வந்து சேர்ந்தது மீதி உயிர்

விட்டு விட்டு துடித்த இதயம்
ஒரே அடியாய் துடிக்க
உள்ளே வந்து சிக்கிகொண்டால் அவள்

வளந்தது துளிர் விட்ட செடியாய் காதல் ,,
என்றும் ஏதோ ஒரு புயலை
போல இக்கணமும் அவளை கண்டால்
காணாமல் போகின்றன  வார்த்தைகள் ,,,



கவி ,,,,..........//////

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு