காதல் துளி

காதல் துளி

கால்கள் நடந்து சென்ற
வேளையிலே ,ஆட்கள் இல்லா
சாலையிலே என் புருவம் விரிய
கண்கள் செய்த புண்ணியமோ என்னவோ
இமைகள் கூட பிரமித்து
மூடாமல் பார்க்க ,இதழ்கள் யாரை
தேடியதோ தெரியவில்லை
வாயை பிளந்து அது ஒருபுறம் பார்க்க
விழியிலே பசைகுத்தியது போல
அவள் உருவம் நீங்கவில்லை
இன்றும் ,,

அவள் பிரம்மனின் தவிறவிட்ட
படைப்பு ,கார்மேகம் கூந்தாலாகி
வானவிலுக்கு கருப்பேட்ரிய புருவங்கள்
மலையின் விளிம்புடிய விழிகள்
சிற்பமாய் செதுக்கப்பட்ட மூக்கும்
சிலம்பால் இடப்பட்ட பொட்டும்
கதிரவன் விடியல் கொண்ட நெற்றியும்
அதில் ஏறிக்கொண்ட வகிடும்
நாவல் பழம் நறுக்கிய உதடும்
அதனருகிலே ஒட்டிக்கொண்ட கண்ணகுழியும்
என வர்ணிக்கவே வார்த்தைகள் போதாது

ஒருநாள் தான் சிரித்தால்
என்னையும் பார்த்து பிடித்துகொண்டது
காதல் காய்ச்சல்,மருந்தாக மனமோ
அவளையே கேட்க , உடல் நிறைய
பயத்துடன் அவளை நெருங்கிட
அவளின் பார்வை விழவே
பாதிநாள் போனது ,

பேசிடதான் சென்றேன் என்றாலும்
வார்த்தைகளோ முட்டி முட்டி
என் தொண்டையை புண்ணாக்கிவிட்டது ,
வாயருகே ஒன்றும் வந்து சேரவில்லை .

பதட்டத்துடன் அவளை பார்க்க
தரிசனம் எனக்கும் வாய்த்தது,
அவள் பார்த்த பார்வையில்
மனம் காற்றில் மிதக்க
உள்ளுக்குள் இருக்கும் காற்றும்
கதவை திறந்து வெளியேற
திக்குமுக்காடி போனேனே நான்,

என் கண்களின் காதலை
தெரிவிக்க மௌனமும் பேசிட
என்னதான் ஆனதென்று தெரியவில்லை
அவள் என்னிடம் பேசிவிட்டாள்.

நானும் என்காதலை தெரியபடுத்த
அவள் அமைதியில் புதைந்திட
நேரத்தை கடனாக பெற்று சென்றுவிட்டாள்,

அவள் வாங்கிய நேரம் முடிந்தவுடன்
அசலை பெற சென்ற நொடியிலே
என் மனதில் எழுந்த கேள்விகளுக்கு
கூகுளே கூட பதறி விடும் ,

இறுதி மூச்சாக அவள் வந்துவிட்டாள்
மனமோ கிணற்றின் மூலையில்
நிற்க என்னதான் பதில் வருகின்றதென்று
பார்க்க..? பச்சைக்கொடி கிடைத்துவிட்டது
என் காதலுக்கு ,ஒரே துளிநொடியில்
என் உயிர் சுவர்க்கம் சென்று திரும்பியது

அதிர்ச்சியில் குழந்தையாக நான் அழ
அன்னையாக அவள் மாற
அன்றே தெரிந்து விட்டது இவள் தான்
என் இரண்டாம் தாய் என்று .

அப்படியே காதல் சென்ற வாக்கிலே
காலங்களும் நடந்து சென்றது
அவுடன் நான் இருந்த நொடிகளுக்கும்
பொறாமை எழுந்தது போல
விடியல் விடிந்து ,
செல்லமாய் காபியும் என்னை வருடிட
நாக்கும் உள்வாங்கி கொண்டது,
கைப்பேசியில் ஒரு குறுந்தகவல்

என்னை விட்டுவிடு என்ற
செய்தி புயலாக மாற
இவன் கண்களில் மட்டுமே மழை பெய்ய
அவள் வீடருகே சென்றால்
அவள் தேவலோகம் சென்றுவிட்டாள்
என்ற உண்மை புரிந்தது ,
காரணம்தான் ஏன் என தெரியவில்லை,

அவள் இறக்கவில்லை என்கிறது மனம்
என் உள்ளே அவள் இருக்க எப்படி இறப்பாள்
கடைசி நொடி வரை காதல்
கண்களில் இருக்க
எனக்காக அவள் எழுதிய
வார்த்தைகளில்லா உயிருள்ள
கடிதம் வந்தது,

!!”’என்னால் உன்னுடன் வாழ இயலாதென்று
காலம் சொல்லி விட்டது என்னிடம்
கண்ணை மூட போகிறேன் என்ற நொடியிலும்
என் கண்களில் நீதான் இருப்பாய் ,,,
என் உயிர் உன்னிடம் தான் உள்ளது
அழுகாதே,,இறந்தாலும் வலிக்கும்
நீயும் இங்கு வந்துவிட்டால்
நம் காதல் உண்மைக்கு எதிராக அமையும்
எனக்காக வாழ்ந்து விடு,,உன்னிடம் கேட்கும்
முதல் பரிசை எனக்காக தருவாயா ,.....

ஆயிரம் முத்தத்துடன் உன் மூச்சு ,....

நான் உன் நினைவுகளுடன் சொர்கத்திலே
வாழ்ந்து விடுகிறேன் ,,அடுத்த ஜென்மம்
என இருந்தால் என் கருவறையில்
உன் உயிர் நிற்க
வரம் பெற்று வருகிறேன்...

வாழலாம் ,,என்றும்
உன் உயிராக ,,,,,காதல் துளிகளுடன்
இக்காதலி ,,.........................

உண்மை காதல்களுக்கு சமர்ப்பணம் ..
கண்களில் கன நீர் பெருக்கடுக்க..
விடைபெறுகிறது என் மனம்
காதல் துளிகளுடன்...................




,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு