நிுர்

நீர்

நிஜமும் மறையும் தருணத்திலே
நிழலும் கரையும் விஷயத்திலே ,
நெஞ்சம் உருகும் சமயத்திலே
காதல் நுழையும் கலங்கத்திலே
கண்ணிலே தோன்றி இமையை நினைக்கும்
நீயா ,,,

காலங்கள் வலியது ,
காரணங்கள் நிறைந்தது
கண்ணிலே தூசி விழுந்தாலும்
காயங்கள் உடலில் நிறைந்தாலும்
களிம்பு கூட உன்னால் தானே ,,
நீயா

கற்பனைக்கு கவித் தந்து
கடவுள் அனுப்பியா வந்தாய் ,
விக்கினாலும் நீதானே ,
துக்கத்திலும் நீதானே
கக்கினாலும் நீதானே
சொக்கினாலும் நீதானே
பத்தினாலும் நீதானே
திட்டினாலும் நீதானே
வாடினாலும் நீதானே
வறுமையிலும் நீதானே
யார் நீ ,,எல்லாவற்றிகும்
முன்னிர்கிறாய்,,
இருவது முப்பதில்
காணாமல் போய்விடுவாய்என
இப்போதே  கூறுகிறார்கள்,
என்ன ஒரு மாயம் ,,

கதிரவன் கண்டதும் மறைகிறாயே
உனக்கும் அவனுக்கும் என்ன சண்டை ,,

இருப்பதாலோ என்னவோ
உன்னருமை புரியவில்லை
இவர்களுக்கு ,,
கடல் முழுதும் இருக்கிறாய்
என்றிருக்கும் இவர்கள் அறியா,
பருக முடியாதென்று ,,

பிறப்பிலும் நீ
பசியிலும் நீ
உடலிலும் நீ
உயிராய் நீ
உணர்வாய் நீ
இறப்பிலும் நீ ,

என்ன சொல்வது
காப்பாத்துங்கள் என் நண்பன் இறக்கும்
தேதி இப்போதே வந்துவிட்டது ,,

இருக்கும் வரையாவது
சந்தோசமாய் வையுங்களேன்

காதலர்களே உங்கள் கவனத்திற்கு
கண்ணீருக்கும் பஞ்சமாகிவிடும்
பார்த்து கொள்ளுங்கள்,,

என்னவென்று புரியவில்லையா ..
நீங்கள் தினமும் பயன்படுத்தும்
நீர்....துளியாய் உயிர் ...
சிந்தனையுடன் உங்கள்
........கவியரசன்

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு