சுதந்திரம்
சுதந்திரம்
எது சுதந்திரம்
பேச்சுரிமை கொடுத்துவிட்டு
எது பேசினாலும்
சிறையில் அடைப்பதா
எழுத்துரிமை
கொடுத்துவிட்டு
எது எழுதினாலும்
தவறு என்பதா
குடியுரிமை
கொடுத்துவிட்டு
எது செய்தாலும்
தடை போடுவதா
இல்லை நினைத்தாய்
என்பதை
நினைவில்
இருக்கும்படி செய்வதே உன் சுதந்திரம்
இக்கால
சுதந்திரம் ,,என்பது
தாய் தந்தை
மகனுடன் இருப்பது
பெண்கள் தனியாக
நடப்பது
ஆண்பாதை மாறாமல் இருப்பது
எங்கயும் தமிழ்
பேசுவது
அனைத்திலும்
பிறமொழி சேராதது
விவசாயி விலை
சொல்வது
இடைதரகர்
இல்லாமல் போவது
இவை நம் நாட்டின்
அத்தியாவசிய
சுதந்திர தேவைகள்
நம் தேவைகள்
கதவுகள் இல்லா
வீடுகள்
காவல் இல்லா
வட்டங்கள்
குருவி பறக்கும்
மாடிகள்
அன்னியம் இல்லா
வாணிபம்
அயல் ஆள் இல்லா
தொழில்கள்
வேதிகள் இல்லா உணவுகள்
கைபேசி இல்லா
வாழ்க்கைகள்
தூசிகள் இல்லா
நகரங்கள்
கள்ளி காட்டிலே
நடந்து சென்றாலும்
காரிலே ஊர்ந்து
சென்றாலும்
காலங்கள் மாறி
போனாலும்
கண்ணியம்
குறைந்து போனாலும்
சுதந்திரம்
மட்டும் வாடகைக்கு கூட
கிடைப்பதில்லையே,,,,
Comments
Post a Comment