Posts

Showing posts from January, 2020

கருப்பழகி

Image
அதோ , சாம்பலாய் போகட்டும் அந்த கதிர் வளையம் . கன்னியின் மேனியில் கோவமோ ஏன் , உன்னை வடிக்கும் நேரத்தில் வாரிவழங்கிவிட்டானோ தூரிகையில் வித்தன் அவன் கருநிறம் கொண்டே காவியம் முடித்துவிட்டான் . கண்மை திருட , உயிரோவியம் அனுப்பி வைத்தான் . பிரம்மன் ? புல்வெளியில் பனித்துளிகள் பிரதிபலிக்கும் இவள் விழிகள் . வயலின் வாசித்தே நகர்கின்றன வார்த்தைகள் அல்ல  வாழ்க்கையும் கூட வஞ்சிக்கொடிகள் வண்ணமாய் கண்டவனுக்கு அடர் நிறம்  என்றதும்  ஆச்சர்யமே வானும் விழுங்கும் இருட்டோளியில் நிலா அழகென்றால் , மிளிர மறைந்த இரவும் அதன் அடரும் அழகன்றோ வெட்கி குனிந்து விரல் தரை தேய்த்து , என்னை நோக்கி இன்முகம் கண்டாய் ! பாயும் காற்றில்  பல்சுவை கண்டேன் ! பதியம் அன்றி வான்வரை வளர்ந்தேன் . கண்பட்டு விடுமென கண்மை இட்டிருந்தாய் கண்டு கொள்ள கால் நாள் கழிந்தது , உதடுமட்டும் அடர்சிவப்பில் ஒன்றே முக்கால் அங்குலமாய் தனியே தெரிந்தது . அடர்மழையே அழகென்றால் அவள் என்ன ! விதிவிலக்கோ .

மந்திர புன்னகை -1

வெளியேறிய வாசனையில் முகர்ந்தது அவள் முகம் , மகரந்த சேர்க்கையில் தவறவிட்ட தேன்துளி  காரிருள் கண்ணுக்கிடையில் விழுந்தது எத்தனை மானுட பூச்சிகளோ தீச்சுடர் கண்டேன் திசைஏது அறியாமல் தொலைந்துவிட்ட காற்றோடு கைகள் பிணைத்தவாறு வர்ணம் வேண்டுமென்றால் வானவில் கொண்டு செல்வாள் வாசம் வேண்டுமென்றால் மலர்பொழில் வசித்துவந்தாள் காணும் கண்ணொளியில் நான் கண்ட என்முகமோ பேரார்வம் கொள்கிறேன் பகல் கனவு பளித்திடவே ,. google.com, pub-3059331261787785, DIRECT, f08c47fec0942fa0