மந்திர புன்னகை -1

வெளியேறிய வாசனையில்
முகர்ந்தது அவள் முகம் ,
மகரந்த சேர்க்கையில்
தவறவிட்ட தேன்துளி

 காரிருள் கண்ணுக்கிடையில்
விழுந்தது எத்தனை
மானுட பூச்சிகளோ

தீச்சுடர் கண்டேன்
திசைஏது அறியாமல்
தொலைந்துவிட்ட காற்றோடு
கைகள் பிணைத்தவாறு

வர்ணம் வேண்டுமென்றால்
வானவில் கொண்டு செல்வாள்
வாசம் வேண்டுமென்றால்
மலர்பொழில் வசித்துவந்தாள்
காணும் கண்ணொளியில்
நான் கண்ட என்முகமோ
பேரார்வம் கொள்கிறேன்
பகல் கனவு பளித்திடவே ,.


google.com, pub-3059331261787785, DIRECT, f08c47fec0942fa0

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு