ஆலங்கட்டி
ஆலங்கட்டி கண்ணோரத்தில் நீ வரும் நேரத்தில் நெஞ்சோரத்தில் புயல் மழை வருவதில் ஐயம் ஏதோ விதம் விதமாய் நிலவும் தெரிந்திடுமோ வண்ணங்களின் துணியிலே அதுவும் மிதந்திடுமோ வானத்தின் இருளில்தான் மிளிருமோ விழிக்கோளம் சுழற்றி அடிக்குமோ , மாயம் தானடி,நீ வந்து சென்ற அடுத்த கணம் குப்பையின் வடிவங்களில் ஓவியம் காணும் என்னிரு குருட்டு விழிகள். வித்தியாசம் தந்திடாமல் நகரும் காற்றுக்கும் உடை உடுத்தி பார்க்க தூண்டும் நயம் பூண்ட நெஞ்சம் ஏழைகள் கூரை மழையினில் நினைவது போலவே நினைகிறேன் காதல் மழை பசித்தும் விரதம் இருக்கும் ஒரு தியான நிலை , நினைவுகள் ஒரு சேர அவள் மட்டும் மண்டையின் நடுவில் நினைத்திடும் யோகா இல்லாத யோகா அத்துனை பொருத்தம் சேருமா என தெரிந்துவிடவில்லை என் விழிகளில் உண்மையாக பொருந்திவிட்டாள். உச்சி தலையின் ஒரு குளிர்ச்சி என் தாய் ஜென்னி வந்து இருக்குமோ என என்னை கேட்க என் உள்மனம் என்னிடமே இல்லை அவள் வந்துவிட்டாள். பாத சுவடுகள் எனக்கே தெரிவது இல்லை அத்தனை பொறுமை என் நடையினிலே எனக்கே தெரிந்துவிடாமல் . அழகாய் நானும் ஆகிடாமல் நித்தம் ஆகிறேன் என் கண்ணாடிகளில் ம