கால் கொலுசு சத்தம்
சத்தியம் செய்தும்
நிரூபணம் ஆகாத
உண்மைகளின் இருட்டில்
உன் காதலும் சேருமோ
கண்டதும் காதல் பிறக்க
அவ்வளவு அழகு இல்லை ,
என் மனம் நீ கண்டதில்லை ! என அறிகிறேன்.
ஆசைகளின் வடிவில் தான்
ஏமாற்றம் என்பதை அடிக்கடி
நீ விலகும் கணம் எல்லாம்
உணர்கிறேன் ,
மற்றொரு கண்டம் குடியேறும்
அளவு கவலைகள்
சேரும் நிலையில் மீண்டும்
திரும்பும் உன் குரல்
நிலையால் திகைக்குமோ என் உயிர் ,
நிலவுகள் தேயும்
அதே நாளில் தான்
உன் அன்பும் தேய்கிறது
நிலவில்லா பொழுதில்
பைத்தியம் பிடிக்கும் என்ற
கூற்று உண்மைதான்
அவள் சாலையில்
நின்ற மாலை நேரம்
கண்களை இருக்க மூடும்
சொற்பனம் கண்ட கணம்
வழுக்கி விழுந்தேன் சாலையும்
என் கீழ் விழுந்தது
சாலைக்கு வந்த
மாரடைப்பில் நான் பிழைத்தேன்
நல்ல வேலை வாகனம்
தப்பித்தது அவள் அருகில்
நின்ற மரத்தினில் மோதி!
மோகபுயல் என் மனதில்
கொழுந்தாக வளர
கிள்ளிவிட்டது அவள்
சினங்கொண்ட பார்வை !
மருந்தளிக்க கூட முடிவதில்லை
உடல் வலி நீக்கி
மனவலி தந்து விலகியவள்
பாதம் தடம் என்னை பார்த்து
ஏளனமாய் சிரித்திட
உடைந்து போனவனாய்
அவள் தடங்களின்
மேற்கூரையில் என் முகம் வைத்து
அழுகிறேன்
திரும்பியும் பார்க்காத
_கல்நெஞ்சம்_
காதலின் போர்வை என்மீது
விழ எத்தனையோ கோணங்களில்
நான் பார்த்த நிமிடங்கள் சொல்லும்
என் வாகன கரை சாலையில்
படிவத்தை வைத்து
முள் மேல் இலையாக சிக்கிய
எனக்கு மீள்வதாய்
குறிக்கோள் இல்லை
குத்தி சாவதே
லட்சியம் என புலம்புகிறேன் .
கவித்துவம் காதலின்
வாசல் படிகள்
அவை வந்தவுடன் வருகின்றன,
எழுத்து வேங்கையின்
இடம் மாறியது .
இலக்கணம் பேசாமல்
வந்து போகிறது ஆங்கிலம் ,
எப்படியோ திரிந்தேன்
காதலின் சாலையில்
போக வழி இல்லாமல்
முடியும் இடம் சொல்லாமல்
வகைதகை இல்லாமல்
புற்றுநோயை போலவே
உன் காதலின் செல்கள்
பரவி விட்டதடி
என் உடல் முழுவதும் ,
கன்னத்தில் பளார் என்று
அடிவிழுவதை காட்டிலும்
உன் சொற்களின் வேகம்
எனை தாக்கியது
அச்சம் காட்டி செல்லும்
உன் கண்ணின் விளும்புக்கு
முற்றுப்புள்ளிகள் இடுமோ
நம் பிரிவு
பரிவர்த்தனை காட்டிட,
நீ என் அன்னை
இல்லை புரிகிறது ,
மழை வருக போகிறதோ
என்கிற மயக்கம்
காரணம் மயில் தோகை விரித்து
மெல்லிய நடையிட்டு
எனை பார்த்து நடந்து வர
தயக்கம் தீர்ந்து பழமை
பேச நேரமில்லலாத நொடிகள்
வெட்கம் வெட்கப்படுமோ
என்பதில் ஐயம்
அவள் பொழிந்தால்
அன்பின் மழையை நிறுத்த
எவராலும் இயலாது 😍😍தொடரும்
😍😍😍
ReplyDelete