ஒற்றை வழி பாதை

ஒற்றை வழி பாதை

கானம் கேட்டிடும் தருணமெல்லாம்
கனவின் நிழல் கண்முன்
நடனமாடும் நேரம் ,,
கணக்கில்லாமல் நீள,,

எதோ புரியாத மொழியினை
பொழிந்து செல்கின்றன
பேசாத மேகங்கள் ,

வாமணன் தேசத்தில்
மூண்ட கோவமோ
என்னவோ ,,,
நீர்த்துளி தவிர்த்து
அக்கினி மழை குளிராய்
என் வானில் ,,

அற்புதங்கள் தினம் நடக்கும்
தெரியாத உறங்கும் பொழுதில்
கண் இமைக்கும் வலிக்காமல்
ரத்தம் உருஞ்சும்
அழகு அரக்கி ,,
கிழித்து கிழித்து
இமைகளின் போர்வையை
அறுத்து ,,,உள் நுழைந்து
என் உறக்கம் கெடுப்பதில்
என்ன அற்ப இன்பம் உமக்கு ,

பொடிநடையாய் நான் யோசித்த
நாட்களை சாலையில்
கழித்து இருந்தால்
விமானம் இல்லாமல்
வேறு நாடு சென்று இருப்பேன் ,

வகை வகையாய் உணவினை
விரும்பின என் நாவுகள்
செத்து போயின ,
காதல் காதடைக்கும் கணம் ,,

வேர்க்குரு போலவே
என்னை குத்துகிறாய் எரிக்கிறாய் ,,
ஆனாலும் என்ன அக்கறை
அழகு பார்த்திட ,,
உன்மேலும் தூவுகிறேன்
வாசம் வீசும் வாசனை பொடியினை ,,

அமைதியாக இருக்கிறாய்
என நினைக்கிறேன் ,,ஆழ்மனம்
பயபடுகிறது ,,
எதிர்கால சேமிப்போ என ,,

நமக்குள் சண்டை வருவதில்
எனக்கு எந்த கடினமும்
புலப்படுவதில்லை,,
நீ என்னுடன் கோவமாகவாவது
பேசும் வரை ,,,

காதலின் எதிரிகள்
கோவமும் மானமும்
சுரணையும் என யூகிக்கிறேன் ,,
காதல் வந்த மறுகணம்
மாய்ந்து போகிறது ,,

என்னதான் சண்டை வந்தாலும்
நான் சாப்பிடுவேன
என உன் அக்கறையும்
நீ உறங்கினாயா என
என் அக்கறையும்
பேசும் மனங்கள் இடையே
வார்த்தைகள் பொருந்துவதும் இல்லை

ஒவ்வொரு வார்த்தைகளுக்கும்
முடிச்சு இருக்கிறது என
ஆயிரமாயிரம் தத்துவம்
ஓடிடும் அந்த நாட்களில் ,,

எப்படி விழுந்தேன் ,,
என் காதலில் ,,
சில நாட்களில் ,,
எதற்காக விழுந்தேன்
பல நாட்களில்
அப்படியே மாண்டால் தான்
என்ன ,,,உன் அன்பின் விளைவுகளில் ,,

ஜனனம் என்பது
உனக்கென்று ஒதுக்கி வைத்தே
பிறந்தேன் என கூறுகிறேன்
தினம் தினம் என் உயிரை
பேர்க்கும் உன் நினைவுகளால் ,,

உடனே சேர எந்த
வாய்ப்பும் நான் தரவில்லை
வருவாய் என தெரியும்
அதற்காக காத்திருக்கும்
நீ நிரம்பிய இதயம் ,,

காதலின் கஷ்டங்களை கூட
ரசித்து பாருங்கள் ,,,
நத்தை வாள்மீது நடப்பதை
விட அழகானது ,,

சற்றே யோசியுங்கள்
சேர்வதற்கு ,,
மறந்தே விடுங்கள்
மீள்வதற்கு

காதல் கண்ணாமூச்சி காட்டும்
விளும்புகள் சேரும் வரை
அதுவே அடையாளம் காட்டும்
அற்புத வாழ்வினை ,,

ஒரு சில வரி ,,

சாலைகள் தனித்து சென்றாலும்
பாதைகள் தொலைவதில்லை
முடியுமிடம் தெரிந்தால்
சேருமிடத்தில் அர்த்தம் இல்லை

எல்லா முனைகளும் சேரும் இடம்
வரும் அதுவரை பொறுமை
காத்தல் சிறந்த முடிவு

கண்களை மூடினால் உலகமே
இருளாகும் பொழுது ,,
நுனிவிரல் சந்திரனை மூடும் பொழுது ,,
எது கஷ்டம் ,,எது பெரிது
மனித மனதை விட ,,

அடுக்கி வைத்து பார்த்தாலும்
ஆயிரம் கடல் நிகராகாது

மனித ஆழ்மனதிற்கு ,
உணர்ந்தால் உணரும் ,,,

கடைசியில என்னையும் தத்துவம் பேச
வெச்சுட்டிங்கலேயா ,,,,,,
தமிழ் கவி ,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு