கண்ணீர் மட்டுமே மிச்சம்
கண்ணீர் கலந்து வியர்வை தெளித்து ,பட்டுபோகும் முல்லை கொடியாக நெய்தல் வழிந்திட குறிஞ்சி பொழிந்திட மருதம் அழிந்திட ,,, பாலை ஆகும் விவசாயி நெஞ்சம் பார்வை பட்டு , விரல் பட்டும் துளிர்த்திடும் குருந்தழை மணிகள் ,,, பாழாய் போன மழை பட்டு அழிந்தால் என் செய்வேன் , கடன் பட்டு அடி பட்டு வளர்த்த நெல் கதிர் வீணாய் போன காற்றிலே கொட்டினால் தான் நான் என் செய்வேன் , கந்துவட்டி கழுத்தினை நெரித்திட, காணமல் போகும் கொஞ்ச நெஞ்ச மானம் எல்லாம் ஒருசேர கழன்டோட ,, வண்டிமாடுகள் போல் அடிமட்ட பயணம் ,,, எதோ எதோ பெய்திடும் மழைகொண்டு\ பாத்தி அமைத்தால் நாற்று நடைகூட கூழி ஆள் இல்லாத நிலையிலே தரிசாக போகும் எழிலுரித்த விளநிலம் ,நான் விழுந்த நிலம் நன்செய் புன்செய் என எல்லாம் என் மனதினை ரணம் செய்ய ,, போட்ட முதலே திரும்ப வராமல் விளையாட்டு காட்டுகிறது விளைந்த விலைபொருள் மழை பெய்யும் நேரமெல்லாம் இடுப்புவலி கர்ப்பிணி போல் வெட்டி துடிக்கிறது இதயம் ,, காற்றடிக்கும் பொழுதெல்லாம் சூரையடிக்கும் இடிபோல வெக்கி போகிறது வயிறு ,,, தினம்தினம் வயிறார நான் உலவாட உணவளிக்கும் ஒரு ம