மின்னலின் சிறகு
மின்னலின் சிறகு ,
கேட்கப்போகும் குழந்தையின் சத்தம் ,
கேட்டு அடங்கும் அழுகையின் சத்தம் ,
கருங்கல் வெடிக்கும் சத்தம் ,
கல்லுபானை உடையும் சத்தம் .
கன்னக்குழி மோதும் சத்தம் ,
கட்டிபோடும் மாட்டின் சத்தம் ,
தேடி ஓடும் நாயின் சத்தம் சத்தம் ,
கட்டை பிளக்கும் கிழவன் சத்தம்
ஒல்லி நிலவிலே குயிலின் சத்தம்
காதை பிளக்கும் இடியின் சத்தம் ,
,ஈரம் சொட்டும் மழையின் சத்தம் ,
ஒதுக்குப்புற முனகல் சத்தம்
எல்லா சத்தமும் அடங்குதடி
ஒற்றை பாத கொலுசின்
ஓசையிலே ,
அங்கே நீ தெரு கடக்க
இங்கே என் மனம் பறக்க
சிறகே முறிந்து பார்வையிலே
கண்முன்னே விழும் காக்கை நான்
இதழின் மடிப்புகளுக்கிடையே
தவழ்ந்து செல்லும் குழந்தை நான் ,
காதோர அட்டிகளுக்கு இடையே
சிணுங்கும் கோபுரம் நான் ,
விரல்களுக்கு இடையே ஊடுருவும்
அக்கினி விரல்களும் நான் ,
மல்லிகை பூ மேனியிலே
வாசம் தேடும் வண்டும் நான் ,
இத்தனையும் நானாக இருக்க ,
நீ மட்டும் தொலைவிலே ஏன்
மின்னலின் சிறகுகள்
மெல்லிதாய் மனதிலே
இறங்கிட ,பார்வைகள்
மறுப்பதேனோ ,
கவியரசன் ,
கேட்கப்போகும் குழந்தையின் சத்தம் ,
கேட்டு அடங்கும் அழுகையின் சத்தம் ,
கருங்கல் வெடிக்கும் சத்தம் ,
கல்லுபானை உடையும் சத்தம் .
கன்னக்குழி மோதும் சத்தம் ,
கட்டிபோடும் மாட்டின் சத்தம் ,
தேடி ஓடும் நாயின் சத்தம் சத்தம் ,
கட்டை பிளக்கும் கிழவன் சத்தம்
ஒல்லி நிலவிலே குயிலின் சத்தம்
காதை பிளக்கும் இடியின் சத்தம் ,
,ஈரம் சொட்டும் மழையின் சத்தம் ,
ஒதுக்குப்புற முனகல் சத்தம்
எல்லா சத்தமும் அடங்குதடி
ஒற்றை பாத கொலுசின்
ஓசையிலே ,
அங்கே நீ தெரு கடக்க
இங்கே என் மனம் பறக்க
சிறகே முறிந்து பார்வையிலே
கண்முன்னே விழும் காக்கை நான்
இதழின் மடிப்புகளுக்கிடையே
தவழ்ந்து செல்லும் குழந்தை நான் ,
காதோர அட்டிகளுக்கு இடையே
சிணுங்கும் கோபுரம் நான் ,
விரல்களுக்கு இடையே ஊடுருவும்
அக்கினி விரல்களும் நான் ,
மல்லிகை பூ மேனியிலே
வாசம் தேடும் வண்டும் நான் ,
இத்தனையும் நானாக இருக்க ,
நீ மட்டும் தொலைவிலே ஏன்
மின்னலின் சிறகுகள்
மெல்லிதாய் மனதிலே
இறங்கிட ,பார்வைகள்
மறுப்பதேனோ ,
கவியரசன் ,
Comments
Post a Comment