ஏதோ நேரம்
சிரித்து செல்கிறது
மேகங்கள் ,
கருந்துணியை உடுத்தி
யார்க்கு தெரிவிக்கிறது ,தன் எதிர்ப்பை ????
கட்டளையிடும் இடியின் சத்தம்,
யாரை மிரட்டுகிறது ,
அர்ஜுனனையா ,,...
புகைப்படம் எடுக்கும் மின்னல் ,
யாரை தான் படம் பிடிக்கிறது ,
ஒரு வேலை என்னைத்தானோ ,,
எலியும் புலியுமாய்,
வானமும் பூமியும்
சண்டையிட ,
ஒளிந்து பார்கின்றன வண்டுகள்,,,
எத்தனை பேரிடம் தான்
கடன் வாங்கியதோ மழை ,
இப்படி அளிக்கிறது ,...
எதுகை மோனையாய்
ஏலம் போடும் சிட்டுக்குருவிகள் ,
வரவேற்கின்றனவோ ,
மயில் ஆட்டத்துடன் ...
முள்ளிருக்கு கீழேயும்
ஈரம் இருக்கும் ,
மாற்றி பாருங்கள்,
மாற்றம் தெரியும் ....,
Comments
Post a Comment