செந்தூறல் வீசிடும் மேகம்

செந்தூறல் வீசிடும் மேகம் 

விழியும் மழை பொழியும் தருணத்திலே 
கண்ணருகே வெள்ளம் பாய்ந்து வழியும் 

நேரத்தில் நெஞ்சருகே மஞ்சள் பூசியமுகம் ,
அரவணைப்பில் ஈர கண்கள் களைப்பாட 
தேம்பிகொல்கிறது மனம் ,

இருக்கத்தான் ஆசை என்றாலும் 
பிரிந்து செல்லும் மூச்சு ,,
அணைக்கத்தான் மனம் வந்தாலும் 
தடுக்கிறது மானம் ,

எதோ ஒன்று என் மேல விழ 
திரும்புகிறது அந்த துளி 
என் தோலின் மேல் ,
என் தோழியின் ,கண்ணீர் வியர்வை ..

காதலை தாண்டியும் பல உறவுகள் 
இருக்கத்தான் செய்கின்றன ,
பாக்கியம் படைத்தவன் போல் எழுகிறேன் 
என் தோழியின் கரம் பிடித்து ,

பெண் தோழியின் நட்பும் 
உன்னதம் தான் .மதிப்பு அங்கே அதிகம் ...
எனக்கு கிடைத்த நட்பின் 
சில துளிகள் ,,,..................
செந்தூறல் வீசிடும் மேகமாய் என் நட்பும் 
என்னை பார்த்து பொழிகிறது ,
கவி  ,

Comments

  1. HI like this line..பெண் தோழியின் நட்பும்
    உன்னதம் தான் .மதிப்பு அங்கே அதிகம் am feel and live for relation

    ReplyDelete
  2. Machi with u permission Itha yenoda girl frnd ku delcate pandran da

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Machi with u permission Itha yenoda girl frnd ku delcate pandran da

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு