கள்வனின் முத்தம்

கள்வனின் முத்தம்

கல்யாணம் ஆச்சு ,
கன்னி போச்சு ,
கள்வன் கன்னியின்
கண்ணாக மாறியும் ஆச்சு ,

சிவந்த உதடை நீ உரசையிலே
என் கன்னிச் சேலை பறந்ததடா,
விரல் என்னை தீண்டியிலே
என் உயிர் போனதடா ,,
[இதுக்குமேல சொன்ன ,,ஐயோ A certficate
கிடைச்சுரும் ,என்ன கொடும sir.]

கருவும் சேர ,
காதல் மாற ,
புதுமணம் இரண்டும்
திருமணத்தால் இணைய ,
வாழ்விலே புதுக்கோள்
அரைகுறையாய் என் வயிற்றினிலே ,,

தொட்டு தொட்டு பார்த்தேன் ,
தொட்டேவிட பார்த்தேன் ,
பொறுமை தனை இழந்து ,

முத மாசம் ,
வாந்தி எடுத்தது,
இரண்டாம் மாதம் தலை சுற்ற
மயங்கி விழுந்தேன்
மூன்றாம் மாதம்
மருத்துவர் சொன்னார்
மூன்றாவது உசுரு
உன் குடும்பத்திலே என்று ,

நான்காம் மாதம் முதலே
கணவனின் கொஞ்சல்களுக்கு
இடையிடையே காணமல் போவதும் ,
கணவனின் அன்பிற்கு
அடங்கிபோவதுமாய்,பொழுதுகள் கழிய ,

ஐந்தாம் மாதம் உணர்ந்தேன் ,
என் சிசுவை ,
என் கைகளால் அவனை
இதபடுதிகொண்டே ,
படுக்கும் பொழுதும்
நடக்கும் பொழுதும்
ஒரு போதும் நான் மறந்தது இல்லை .
நன் கர்பிணி என்று ,

ஆறாம் மாதம் மெல்ல வலித்தது
என் கணவனின் முத்தம் போலவே ,
ஏழாம் மாதம் கைகொரு
கொடி உடுத்தி வளைந்த காப்பினைகொண்டே
வளைகாப்பு நடத்திட ,,
மஞ்சள் குங்குமம் என
மங்கலம் முழுதும் நான் சூட ,
தாயானேன் என் கணவற்கு
முதல் முதலாய் என்னை பிரிய ,
குழந்தையாய் அவர் மாற ,
தாயாய் ஆனது என் நெஞ்சம் ,

பிரிந்தது வலித்தது தான்
தாய் வீட்டிலே தாயாக
போகிறேன் என்ற மயக்கத்திலே
கலைந்தது சோகமும் ,

எழாமல் பார்த்தால்
அழாமல் நீ பிறவாய் என
எல்லா வேலைகளும் என் கைகளிலே ,

சுகபிரசவமாய் நீ பிறக்க ,
என் எலும்புகளிடையே
உன் தலை சிக்கிட ,
மரணத்தினை பாத்துவிட்டு
உனக்கு வாழ்நாள் தரசொல்லி
ஆசை ,  ,எமனிடம்

கண்களிலே நீர் பெருக்க
மழை சட்டென பெய்வது போல்
வலியும் இடிபோல் இடிக்க
பறந்து சென்றது மருத்துவ மனைக்கு ,
நான் சென்ற ஊர்தி

அடடா வலிகளும் இங்கே வழி கேட்க
கர்ணனை போல் வலிதந்து
உன் அழுகை புவியிலே கேட்டிட ,
நீ அழுவதை பார்த்து சிரிக்கிறேன் நான் ,

மார்பிலே முட்டிட ,
என்ன சுகம் அது ,
பத்து மாச வலிகளும்
பட்டென கனபோழுதிலே
காணமல் போனது ,
கணவனின் கையிலே
கைக்குழந்தை கிடக்கையிலே ,
பத்துமாச பந்தம்
மண்ணிலே ,,
ஒரு குழந்தையிடம்
மறு குழந்தை ,,
சிரிப்பாய் நான் மலர ,
என் நெற்றியிலே
கள்வனின் முத்தம் ,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு