வாழ்வு

வாழ்வு ,
நதிக்கரையின் ஓரம் ,
நதி செல்லும் பாதையிலே,
மனதை ஓடவிட்டு
அமைதி காக்கும் பொழுதுகள்

இரவு வரும் என தெரிந்தே
உதிக்கும் சூரியனை
உற்றுநோக்கி சவால் விட்டு
இரவின் நிலவிலே குளிக்க கிடைத்தால்,

வெளியே தள்ளுகிற வியர்வையை
கையிலே தள்ளி ,பையிலே கட்டிட
இரவிலே முடிச்சினை  அவிழ்த்து
கிடைக்கும் உறக்கம் ,ஆகா

கிடைக்கும் பத்திலே,
தானுண்டு ,தன குடும்பம் உண்டு
மற்றவர்க்கும் பகிர்ந்தளிதால் வரும்
மன நெகிழ்வு ,என்னவொரு மருவு

காலம் சென்றாலும் ,ஈடு கட்டி
அதனுடனே செல்லும் வயதை
இழுத்து பிடித்து ,எமனுக்கே
விளையாட்டு கட்டும் உடம்பாய் இருப்பது

மூப்பினாலும் தாயின்
மடியருகே தலை வைத்து
படுக்க கிடைக்கும் ஒரு சுகம்
அது வல்லவோ,
வாழ்வு ,,,

வாழ்கையை ரசித்து வாழுங்கள்
அடுத்த நாள்
உதயம் பார்போமா என்ற வாழ்விலே .
வாழ்கையை ரசித்து வாழுங்கள் .
 
கவியரசன் ,, 

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு