கனவு கள்வன்

கனவு கள்வன்

கனவுகளுக்கு இங்கே வேலையே
வருவது இல்லை ,,,
நீ இல்லாமல்
உறக்கமே வருவதில்லை
பகல் கனவா காணட்டும் ,,

கனவுகள் சொர்கத்தின்
வாசலாகவும் ,,
நரகத்தின் எல்லையாகவும்
இருப்பதை உணர்கிறேன் ,,

விடியும் வரை மட்டுமே
கணைகள் வரும் என்றால் ,,
எந்நேரமும் உன்னை
நினைத்து நான்
செய்யும் காரியங்கள் ,,,நிஜமா ,,

சந்திரனுக்கும்
உனக்கும் என்ன தொடர்பு ,,
நீ வந்தால் தான் ,,
இவன் வருகிறான் ,,
கனவு காண்பதே
வேலையாக
ஆகிவிடும் போல் இருக்கிறது ,,,
உன்னை நினைத்து அல்ல ,,
நினைத்து நினைத்தே ,,

கனவில் மட்டும்தான்
நீ சிரிப்பாயானால் ,,
தூக்கமே பிழைப்பாகட்டும் ,,

உலகத்தின் எவ்வளவு தான்
நடந்தாலும் ,,
கனவுகள் மட்டும்
என்னை எங்கேயோ
தூக்கி செல்கின்றன ,

களைப்புகள் வரும்
நேரங்களில் மட்டும்
விடுப்பு எடுத்து கொள்கிறது ,,
கனவு ,,

நிஜமாய் இருக்கும் என
நம்பியே பல விடியல் கடக்க
கனவுகள் எனும்
பதில் தான் கிடைக்கிறது

உறக்கத்தில் நீ
பேசிடும் வார்த்தைகள்
பதிய படுகின்றன ,,
முகுள மேடையிலே

அட என்ன கொடுமை ,,
குழந்தைகள் மட்டுமே
உறக்கத்தில் சிரித்திடும் ,,
நினைத்திருந்தேன் ,,
உன்னை பார்க்கும் வரை ,,

ஒவ்வொரு முறை
நான் அழும் போதும்
உறக்க்கதில் சிரிக்கிறேன் ,,
என்ன ஊடல்
நடக்கிறதோ ,

ஒன்று மட்டும்
புரிகிறது ,,காதல்
பலரை கண்விழித்தே
கனவு காண செய்கிறது ,,
அடியேனும் அடங்குவேனோ ,,
தமிழ் மேல் கொண்ட காதலில் ,,

கவிதைகள் பிறக்கின்றன ,
கனவுகள்
பிரசவிக்கும் வார்த்தைகளில் ,,

கனவுகளில் மட்டுமா
பிறக்கிறது ,,,
ஐயோ ,,
காதல் கோவித்து கொள்ள
போகிறது ,,

நெஞ்சிலே காதல் ததும்ப,,
திறக்கும் ஊமை விழிகளிலே
காணலாம் ஆயிரம் கனவுகளை ,,

சுமந்து செல்கிறது மனங்கள் ..
வார்த்தைகள் இல்லாத வடிவிலே ,
பொய்கள் பேசத்தான் ,
கவிதைகள் பிறக்கும் என்றால் ,,
உன்னை பற்றி நான் எழுதுவது ,,,
பெயர் வைக்கவில்லையோ?????????
 கனவில் ,காதில்
விழுந்த வரிகள் ,,

கனவு கள்வன்  

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு