அம்மா

அம்மா ,

நான் இதுவரை
பார்த்ததே இல்லை ,,
நான் எழும் முன்
நீ துயில்வதையும் ..
துயில் முன்
துயில்வதையும் ,,.

காய்ச்சல் ஏதேனும்
வந்தால் ,,கவலைதான் ,,
உனக்கு ,,
பிள்ளைகள் என்ன உண்பார்கள் என்று ,,

நீ கோவம் கொள்வதையே
பார்க்கும் எனக்கு
பாசங்கள் புரிவது இல்லை ,,
நான் உறங்கிய பின்
எதோ விரல்கள்
தலைகோதும் வரை ,

நான் கூறிய பல
பொய்கள் நம்பினாய் ,,
நான் உண்டேன் என்பதை தவிர ,,

மாதம் மூன்றாய் வந்தாலும் ..
உன் வேலைகளோ
தேய்ந்ததே இல்லை

பல நேரம் நீ கூறும்
பொய்கள் ,,,
எனக்கு பசி இல்லை ,,
இந்தாப்பா ,,,,

இதுவரை உலகிலே
எழுதபடாத
மிகபெரிய கவிதை ,,

தன் வேலைக்கு
மாற்றாக கடவுள்
அனுப்பிய நடக்கும் தேவதை ,,

நான் இன்னும்
உன் கண்களிலே தவழ்கிறேன் ,,
நீ அடிக்கடி சொல்லும் வார்த்தை ,,
உன் விழிகளின்
தேடல்களில் நான்
தவறியதே இல்லை ,,

உன் நெற்றியிலே
பொட்டும் மறக்கலாம்,
என் வேலைகள் மட்டும்
மறந்ததே இல்லை ,,

எனக்கு பிடித்தவற்றிர்காக
தனக்கு பிடித்ததையே
மறக்கும் ஓர் உன்னதம் ,,

நான் என்று பட்டம்
பெற்றோனோ என் தாளினை
தெருவெல்லாம் சுற்றிய
பெருமிதம் ,,

நித்தம் நீ
சமைத்தாலும் ,,
எனக்கு பிடிக்காதவை
இடம்பெற்றதே இல்லை ,,
கண்களில் நான்
நீர் சிந்தும்
கணமெல்லாம் நீ
சிந்தும் நீருக்கு
என்ன பெயர் வைப்பது ,,,

தந்தையின் கோவம்
என்னை ஆட்ப்பரித்தாலும்
உன் முந்தானை மட்டும்
காவல் வர மறுத்ததே இல்லை ,,

நான் என்று பிறந்தேனோ ,,
அன்றே தாயானாய் ,,
மாற்று ,
என்னை ,சுமந்த கணமே
நான் உன் பிள்ளையானேன்,,

இடுப்புகளிக்கு இடையே
நான் வர நீ இறந்து வந்தாய் ,,
பனிக்குடம் முழுதும்
உன் அன்பினால் நான்
மிதந்தேன் ,,,
அக்கணம் முடிய ,
வெளியே வந்தேன் ,,
உன் முகம் பார்த்ததும்
அழவில்லை ,
அவ்வன்பை இழந்தேனோ
என்றே நான் அழுதேன் ,,

சிறு முத்தம் நெற்றியில் இட்டாய் ,,
என் நிறம் பார்க்காமல் ,,
சிரம் பார்க்காமல் ,,
என் விழி மட்டுமே
தெரியா ,,,உன் கண்களில் ,

ஆயிரம் அடி தூரம்
இருந்தாலும் ,
என் கஷ்டம் நீ அறிவாய் ,,

அருகே நீ இருந்திடவே ,,
உன் பாசம் புரியலையோ ,

வீதியில் நான் நடந்திடவே ,,
பரிகாரம் செய்திடுவாய் ,,

பிறவி பலன் செய்தேனோ ,,
உன் கருவறையில்
சிந்திய துளியில் ,
மலராய் மலர்ந்தேனோ ,,

ஆயிரம் தான் நான்
சொன்னாலும் ,,
உன்னை  விட ,,
பெரிய கவிதை ஏதும் இல்லை ,,

என் அன்னையே ,,
உலகில் வாழும் அனைத்து
அன்னைக்கும் சமர்ப்பணம் ,,

அன்னையர் தின
வாழ்த்துகள் ,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு