குறைகுடம்

தொடர்ச்சியான தோல்விகள் தான் ,,
ஓய்விலே நமக்கு
வெற்றியை தருமென
உணர்கிறேன் ,

நிராகரிப்புகளின் மூலமும்
ஒருவரை நிர்மூலமாக்க
இயலும் என்றால் ,,
வாழ்விலே எவரும்
வென்று இருக்க முடியாது ,,

வாழக்கையே வெறுப்பதாக
உணர்கிறேன் ,,அப்படி
என்ன வாழ்ந்துவிட்டேன் ..,,,,,,,
ஒருவேளை முன்ஜென்மமோ,

சிக்கும் வலையில் எல்லாம்
விழுந்து விட்டேன் ,,
வேறு ஏதாவது கொண்டு வாருங்கள் ,

முயன்று தோற்கும் நான்
முட்டாள் என்றால் ,,
வேடிக்கை மட்டுமே
பார்த்து கொண்டு இருக்கும் ,,
இவர்கள் யார் ,,??

முட்டாள்கள் ஜெயிப்பதில்லை ,,
கவனிக்கபடுகிறார்கள் ,
கவனிக்கவாவது படுகிறேனே <<

தனிமையில் இருப்பதை விட ,,
தன்மையானது வேறேதும் இல்லை ,
கடின நேரங்களில் ,,

பிரச்சனைகள் தான்
வாழ்வென்றால் ,,
பிறப்பதை விடவா ,,
பெரிய பிரச்சனை வந்து விடபோகிறது ,,
சமாலிக்கலாமே ,,

இறப்பது மட்டுமே தீர்வென்றால் ,,
சவப்பெட்டிகள் தினம் தினம்
தேவைப்படும் ,

வெல்வது யாராக வேணாலும்
இருக்கட்டும் ,,முயல்வதை
மட்டுமே குறிக்கோளாக
வைக்கும் கண்களுக்கு
தோல்விகள் கடினம் தான் ,.

காலம் தேவை படும் ,,
கண்ணீரும் தேவைப்படும் ,,
சேமித்து வை ,
மொத்தமாக அழுந்து விடலாம் ,,
ஆனந்த கண்ணீரால் /

விளக்கில் ஒளியினை மட்டும்
பார்க்கும் கண்களுக்கு ,
திரியினை காண தெரிவதில்லை ,,

வெட்கம் தான் ,,
கண்ணாடியில் பார்த்து சிரித்து கொள் ,,,
உன்னை முன்னேற்ற
வேறு எதுவும் தேவைபடாது ,/

எனக்கென்று புது வழி
அமைக்கிறேன் ,,
சோம்பேறி என்கிறது
சமுதாயம் ,,

மற்றவர் சென்ற வழியில்
செல்ல விருப்பம் இல்லாத
ஒருவன் தான்
வெற்றி பெருகிறான் ,,

எதுவும் தடையில்லை ,
மனதின் பயத்தை தவிர ,,

முயன்று கொண்டே இரு
உனக்கான வாய்ப்புகள்
தேடி வரும் ,..
சமயம் ..நீயும்
தேடவேண்டும்

மனதில் ஓரத்தில்
கஷ்டம் அரிக்கும் போதுதான்
தத்துவம் கைகளில்
ஏறி காகிதத்திலே
அமர்கிறது ,,
காதலை மட்டுமே
எழுதும் கைகள் ,,
கருத்தும் சொல்கிறது ,,
வெறுப்பின் காரணமோ ,,

பேனாவின் முனைகள்
கூர்மை என்பதை உணர்கிறேன் ,
பெரும்பாலும் ,,உங்கள்
நேரத்தை குத்தி கிழிக்கிரதல்லவா

நேரம் வரும் ,
வரும் வரை நான் விட போவதும் இல்லை ,,
தெரியும் ஒருநாள் ,,

பாராட்டுகளுக்கு மத்தியிலே
ஒரு ஓர குறைகளும்
என்னை வலியவன் ஆக்குகிறது ,,

குறைகளுக்கு நன்றி ,,
நிறையும் குடம் போல் நான்
இல்லை ,,நிறைத்தால் தழும்பி விடும் ,,
குறையாகவே இருந்து கொள்கிறேன் ,,

தழும்பாமால் ..

தோன்றியது ,,,,
விண்மீன் இடையே ,,
சிருகல்லாய் நான் ,,

கவலை வேண்டாம் ,,காதல் நாளை
இடம்பெறும் ,,,
கவி , 

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு