விடியற்காலை ஈரம்

விடியற்காலை ஈரம்

நட்சத்திரம் ஏதோ இறங்கிவிட்டது போல
நடுவானில் வெளிச்சம் இல்லாமல்
நம்பிக்கை இல்லா மனது
நம்ப மறுக்கிறது
நம்பி சொன்னவளை .......

நன்குதான் நடந்தது
நாட்பொழுது முழுவதும்
நங்கூரமாய் அவள் நினைவு வாட்டி எடுக்க
நசுங்கிபோவேனே நான்

நடந்தது எல்லாம் நினைவிலே இருக்க
நெஞ்சமது நேசம் மட்டும் வேண்டுமென
நச்சரிக்க நலிந்து விடுமோ பயத்திலே
நனைந்து விடுகிறது  வியர்வையில்

நல்லது தான் மனதும் தேட
நக இடுக்கிலும் அவள் வாசம்
நண்பனின் துணையும் கேட்காமல்
நடுசாம பொழுதுகள்
நகர்ந்து செல்ல ,,
நாட்டியம்போடுகிறது கண்ணீர் துளிகலும்
நன்னீர் குளம் போல்
விடியற்காலை ஈரம் என்னை எழுப்புகிறது ,,,,


Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு