மௌனத்தின் வடிவம்

மௌனத்தின் வடிவம்

கதிரவன் உதிர்த்த பின் தான் புரிகிறது
பல உயிர்களின் உண்மை நிலை ,

அர்த்தவன காட்டிலே எதையோ தேடும்
விலங்கை போல் ,
விடை தெரியாத உலகிலே அலையும்
மனித சடங்கள் ,

கனவுகளுக்கும் கைகால் முளைத்தது போல்
கண்களிலே அத்தனை மகிழ்ச்சி

உதாரனமாய் ஒரு வாழ்வுவேண்டும் என்றால்
தெருவோர இயல்பாய் ,
தினம் தினம் காணும் துன்பத்தை உடுத்தி
அதிலும் இன்பம் காணும்
ஒரு பிழைப்பை வாழு ,

சட்டங்கள் எல்லாம் விடுமுறை எடுத்தது
போல எத்தனை விரோதம் வெளியிலே

எல்லாம் வீசும் காற்றை போல்
மறையுமென ஒரு நம்பிக்கை
மனதிலே ,

இத்தகைய சுழலிலே
எழும் ஒரு கணம்
மௌனத்தின் வடிவம் ,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு