கண்மணியே -3
போர் நடத்தும் அகிம்சை
விழிகளில்
வீழ்ந்தது என் மனம்
அறவழியில் படுகொலை
நடத்தியதோ ?
அண்ணார்ந்து பார்த்திடாத
அன்னபறவையே
அருகே நீ இருக்க
எனக்கேன் இவ்வுயிர்
வினாகேட்டு விடைதரும்
உன் அமைதிக்கு
என் மூச்சுகாற்றும்
கனா கண்டு நிகழ்வான
இன் கணத்திற்கு
என் கண்ணீர் துளியும்
பதிலுரைக்கும் ..
சுவர்க்கம் தேடுகிறேன்
அவள் விரலிடையே விரல்பதித்து
சுவர்க்கம் தேடுகிறேன்
அவளோடு,
விளக்கொளியில் விண்மீன் போதும்
சிரித்துகொள்ள சிறுகடி போதும்
அமர்ந்துகொள்ள செந்தரை போதும்
அருந்திகொள்ள அமுதமும் போதும் ,
அவள் மட்டும் என்றும் போதும் .
தொடரும் ..
விழிகளில்
வீழ்ந்தது என் மனம்
அறவழியில் படுகொலை
நடத்தியதோ ?
அண்ணார்ந்து பார்த்திடாத
அன்னபறவையே
அருகே நீ இருக்க
எனக்கேன் இவ்வுயிர்
வினாகேட்டு விடைதரும்
உன் அமைதிக்கு
என் மூச்சுகாற்றும்
கனா கண்டு நிகழ்வான
இன் கணத்திற்கு
என் கண்ணீர் துளியும்
பதிலுரைக்கும் ..
சுவர்க்கம் தேடுகிறேன்
அவள் விரலிடையே விரல்பதித்து
சுவர்க்கம் தேடுகிறேன்
அவளோடு,
விளக்கொளியில் விண்மீன் போதும்
சிரித்துகொள்ள சிறுகடி போதும்
அமர்ந்துகொள்ள செந்தரை போதும்
அருந்திகொள்ள அமுதமும் போதும் ,
அவள் மட்டும் என்றும் போதும் .
தொடரும் ..
Comments
Post a Comment