கண்மணியே -2

கண்மணியை கண்டதாலோ கண் மணிகளுக்கும்
துயில் தொலைவுற்றதோ , 
விடிகாலை வான்கூட உன்காலில் தவழுமடி 
சற்றே வெளியே நில் .
வாசலில் கோலம் .

மணித்துளிகளோடு சேர்ந்திசைக்கும் 
என் இதயச்சத்தம்
வீதியில் நீ 
தொலைவில் நான் .

வண்டொன்று வெண்மேகம் 
சேர்ந்திடுமோ 
வீணென்று நான் சேர்த்த கணங்கள்
கரைந்திடுமோ

கனவுக்குள் சிறைப்பட்டு
தவிக்கின்றேன்
சற்றே இமைதிற
எனை காண்...
இவ்வாழ்வேன்று நான் பார்ப்பது அதுவே ,,



Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு