நடந்திடும் காதல்
நடந்திடும் காதல்
நிழல் தரையினில் விழுகாத நேரம் .
அவள் மேகத்தின் இருட்டு
என்மேனியின் ஆக்கிரமிப்பு நடத்திட ,
வானங்கள் பொய்யாய் போகுமளவு
அவளின் நெற்றி காண ,
சிந்தனையின் ஆணிவைத்து அடித்தார் போல
அவளின் புகைப்படம் தொங்கியது
என் உயிர்அச்சாணி பிடிகொண்டு .
ஒரு ஒரு நொடியும்
வண்ணமாகுமோ
அழகே ,வசந்தங்களின் முடிவு பாதை
உன் இல்லம் நோக்கிதான் நிற்குமோ ,
விபரீதமாய் போகுமடி ,
கண்ணிமையை மூடிவிடு ,
சற்றே நான் கடக்கும் வரை .
அலைச்சல் கொண்டு தெருவில்
கூட ,பூக்கள் பூக்குமடி
எங்கே நீ நடந்த தடம் .
வாசல் இல்லாத இல்லமாக
அனைத்தும் என் சொந்தம் ஆகுதடி
எனக்கென நீ இருக்கையில்
உலகமே என் காலடியில்
ஒருதலையாய் என் தலையும்
உன் தலையை சுற்றிட
உன் முக திருப்பல் கூட
மண் பாற்பது ஏனடி .
வழக்கமாய் பார்க்கும்
அத்தனையும் வண்ணமாய்
போகுமோ ,
ஆயிரம் நிறங்களின் எதுவடி நீ .
பிரம்மிப்பில் உச்சம்
உன் விழிகளின்
மரண பள்ளம் தானே
இருள்வதற்குள் வீடு செல்லாத
உன் இமைகளுக்கு என்
பார்வையின் ஆழம் மட்டும்
அழகாய் புரிகிறதே ,
என் விரல் பிடிக்கும் வரை
எங்கே நீ இருந்தாயோ
என் கண்ணில் தெரிந்த பின்னே ,
என் நெஞ்சில் இணைந்தாயோ
எப்படி தான் வர்ணிக்க
வார்த்தைகளுக்கும்
பழகி போனதடி
உன் அழகின் அழகிலே
செல்லமாய் நீ குழந்தையை
கொஞ்சிட
வளர்ந்திட்ட குழந்தையொன்று
வாயருகே எச்சியுடன்
அசராமல் பார்க்குதடி .
உன் நடைகளின் வாக்கியத்தில்
இறைவன் சிறு பிழை இழைத்துவிட்டான்
இருந்தாலும் பரவாயில்லை
அக்குறையை தீர்த்திடவே
மனதுகளின் இடுக்குகளின்
அன்பினை ஏற்றிவிட்டான் .
தாழ்வு மனப்பான்மையில்
தாழ்வெதற்கு அடியே .
அடியேன் உன் மனம் சேர்கையிலே
என் வாயிலிருந்து
வார்த்தைகள் வரும் முன்னரே
என் மனதின் மொழி உணர்ந்தாய்
இதைவிடவா சாங்கியம் சம்பிரதாயம் எல்லாம்
பொருத்தங்களின் இடுக்கில்
நம் பெயர் மட்டும் பொரிக்கட்டும் ,
தாஜ்மஹால் உயிர் பெறட்டும்
உண்மை காதல் நம் முன்னே
இறந்த பின்னே ,
அது கட்டி எதுவாகி போனதடி ,
இருக்கும் வரை என் நெஞ்சருகே
காட்டியுள்ளேன் நீ வந்து பாரடி
உடல் குறைகள் பெரிதில்லை
மனதின் உன் வானத்தில்
சிறு வண்டாய் நான் ஆக
உன் மலர் தேசத்தில்
சீலைக்கு அத்துனை பிரியமடி
மலர்க்கோ அத்தனை ஆசையடி
அனைத்திற்கும் நான் எதிரியடி
என் காதல் உன் முன்னே
வந்து சேர நான்கு கால்கள்
எதற்கடி
தவழ்ந்திடும் என் குழந்தையே ,
உன் கணவன் கைகள் போதுமடி
உன் கால்கள் ஆகுதடி
சிறு சிறு பிழைகளில்
என்னை சாய்த்துவிட்டாய்
உன் மஞ்சள் முகத்தினில்
பூசி விட்டாய் .
மூன்று முடிச்சுகள்
இணைத்திடவா ,என் கண்ணே
உன் முதல் பொட்டாய் எரிடவா.
பதில் உன்முன்னே //
காதல் தொடரும் ,
கவலை இன்றி
கவி ..
நாளை வரை பொழுதுகள் நீளட்டும் .
நிழல் தரையினில் விழுகாத நேரம் .
அவள் மேகத்தின் இருட்டு
என்மேனியின் ஆக்கிரமிப்பு நடத்திட ,
வானங்கள் பொய்யாய் போகுமளவு
அவளின் நெற்றி காண ,
சிந்தனையின் ஆணிவைத்து அடித்தார் போல
அவளின் புகைப்படம் தொங்கியது
என் உயிர்அச்சாணி பிடிகொண்டு .
ஒரு ஒரு நொடியும்
வண்ணமாகுமோ
அழகே ,வசந்தங்களின் முடிவு பாதை
உன் இல்லம் நோக்கிதான் நிற்குமோ ,
விபரீதமாய் போகுமடி ,
கண்ணிமையை மூடிவிடு ,
சற்றே நான் கடக்கும் வரை .
அலைச்சல் கொண்டு தெருவில்
கூட ,பூக்கள் பூக்குமடி
எங்கே நீ நடந்த தடம் .
வாசல் இல்லாத இல்லமாக
அனைத்தும் என் சொந்தம் ஆகுதடி
எனக்கென நீ இருக்கையில்
உலகமே என் காலடியில்
ஒருதலையாய் என் தலையும்
உன் தலையை சுற்றிட
உன் முக திருப்பல் கூட
மண் பாற்பது ஏனடி .
வழக்கமாய் பார்க்கும்
அத்தனையும் வண்ணமாய்
போகுமோ ,
ஆயிரம் நிறங்களின் எதுவடி நீ .
பிரம்மிப்பில் உச்சம்
உன் விழிகளின்
மரண பள்ளம் தானே
இருள்வதற்குள் வீடு செல்லாத
உன் இமைகளுக்கு என்
பார்வையின் ஆழம் மட்டும்
அழகாய் புரிகிறதே ,
என் விரல் பிடிக்கும் வரை
எங்கே நீ இருந்தாயோ
என் கண்ணில் தெரிந்த பின்னே ,
என் நெஞ்சில் இணைந்தாயோ
எப்படி தான் வர்ணிக்க
வார்த்தைகளுக்கும்
பழகி போனதடி
உன் அழகின் அழகிலே
செல்லமாய் நீ குழந்தையை
கொஞ்சிட
வளர்ந்திட்ட குழந்தையொன்று
வாயருகே எச்சியுடன்
அசராமல் பார்க்குதடி .
உன் நடைகளின் வாக்கியத்தில்
இறைவன் சிறு பிழை இழைத்துவிட்டான்
இருந்தாலும் பரவாயில்லை
அக்குறையை தீர்த்திடவே
மனதுகளின் இடுக்குகளின்
அன்பினை ஏற்றிவிட்டான் .
தாழ்வு மனப்பான்மையில்
தாழ்வெதற்கு அடியே .
அடியேன் உன் மனம் சேர்கையிலே
என் வாயிலிருந்து
வார்த்தைகள் வரும் முன்னரே
என் மனதின் மொழி உணர்ந்தாய்
இதைவிடவா சாங்கியம் சம்பிரதாயம் எல்லாம்
பொருத்தங்களின் இடுக்கில்
நம் பெயர் மட்டும் பொரிக்கட்டும் ,
தாஜ்மஹால் உயிர் பெறட்டும்
உண்மை காதல் நம் முன்னே
இறந்த பின்னே ,
அது கட்டி எதுவாகி போனதடி ,
இருக்கும் வரை என் நெஞ்சருகே
காட்டியுள்ளேன் நீ வந்து பாரடி
உடல் குறைகள் பெரிதில்லை
மனதின் உன் வானத்தில்
சிறு வண்டாய் நான் ஆக
உன் மலர் தேசத்தில்
சீலைக்கு அத்துனை பிரியமடி
மலர்க்கோ அத்தனை ஆசையடி
அனைத்திற்கும் நான் எதிரியடி
என் காதல் உன் முன்னே
வந்து சேர நான்கு கால்கள்
எதற்கடி
தவழ்ந்திடும் என் குழந்தையே ,
உன் கணவன் கைகள் போதுமடி
உன் கால்கள் ஆகுதடி
சிறு சிறு பிழைகளில்
என்னை சாய்த்துவிட்டாய்
உன் மஞ்சள் முகத்தினில்
பூசி விட்டாய் .
மூன்று முடிச்சுகள்
இணைத்திடவா ,என் கண்ணே
உன் முதல் பொட்டாய் எரிடவா.
பதில் உன்முன்னே //
காதல் தொடரும் ,
கவலை இன்றி
கவி ..
நாளை வரை பொழுதுகள் நீளட்டும் .
Comments
Post a Comment