புதிதாக எதற்கு.. புதிதாக்கு.
புதிதாய் வேண்டாம் புதிதாக்கு
இதுவரை யாரும் அறிந்தது இல்லை
பெண்களின் மனதின் ஆழம் ,,
கடினமும் கூட
கதிரவன் அனலினை போல .
கார்மேகம் முழுவதையும்
கண்ணுள்ளே அடக்கி மையாக்கி வைப்பவள்
சிருதுளியில் உலகையே நிரப்பிடும்
ஒரு அமைதி வெள்ளம்
பக்குவப்படும் எரிமலையின்
ஒர் இடம் போலவே
நிர்கதியின் அர்த்தம் அவள் மனம்
மல்லிகையில் உடல் கொண்டு
மார்கழியின் குணம் கொண்டு
சிலநேரம் பங்குனியின் கோவமும் நடந்திடும்
காலையின் பொற்சித்திரம்
மங்கள முகமே
இச்சையின் ஆசையில்
இணங்கியே ஆகிறாள்
இயற்கையை அழைத்துண்டு
மண்ணுள்ளே செல்கிறாள்
பாவம் நீ மனிதி
உன் கரங்களில் ஒடுங்கட்டும்
உலகத்தின் போர்முகம் .
சினங்கொண்டு எழுந்திடு
பேதையும் நீயே
அறிவையும் நீயே
பவளத்தின் கணங்கொண்டு
பெண்சிங்கம் உண்டோ
வேட்டையின் மாற்றத்தில்.
ஆடையை உடுத்திடு
ஆடையாய் உடுத்திடு
காமத்தின் விழிகளில்
கருணையை காட்டாமல்
ஆடை என்பது உடலை மறைக்கத்தான்
புரிந்திடு நிமிர்ந்திடு .
தோழியும் நீயே
அன்னையும் நீயே
தமக்கையும் நீயே
என் காதலி மனைவியின் மாற்றங்கள் நீயே
கொலை என்பது முடிவுகள் அல்ல
கோழைத்தனத்தின் தொடக்கமே நீதான்
பாவம் என்பது தனியே இல்லை
மனதின் வரையறை தாண்டிடும் அதுவே .
சிரித்தாலே தவறல்ல
சிந்தனையில் தீமூட்டு
கண்மேலே கதிர் போல
இமையுண்டு மறந்திடு
பெண்ணே நீ பெண்தான்
கோடி கொடுத்தாலும் ஆணாகா உன் உடல்
மார்கட்டி மந்தையில் நடந்து திரிவான்
ஆண் மகன் .பெண்ணே இயலாது கண்ணகியே .
ஆண் பெண் சமத்துவம் இருக்கட்டும் ஒரு புறம்
ஆண் பெண் பேதத்தை தெளிவாய் நீ பார்த்திடு
பெண்ணுடல் எங்குமே உறுப்புதான் உன்னை போல்
காட்சியை காட்டாதே ,,பெண்ணே நீ புரிந்திடு .
காட்சியாய் பார்ப்பதை ஆணும் நீ தவிர்த்திடு ,
உலகம் நம் கையிலே நண்பா
நீயுமே ராணுவம்
நீயுமே தனியுகம் நெஞ்சினில் ஏற்றிடு
தோழியை காத்திடு
உலகம் என்பது தனியாய் இல்லை
நிலம் கொஞ்சம் ,நீர் கொஞ்சம்
நீ கொஞ்சம் நான் கொஞ்சம்
அழகாய் பார்த்திடு
அழகாய் ஆகிடும் ,
உலகே உன் கையில்
மெதுவாய் ஏறிடும்
மனிதியே மாற்றம் வரும்
உன் மனதினினை தேற்றிடு ,
காவல்கள் துணை வரும்
நிமிர்ந்தே நடந்திடு ,,
காரணம் நீயாக ஆகாமல்
இருந்தாலும் ,இல்லாமல் தவிர்த்திடு
கவலைகள் தீரட்டும்
தண்டனை கடுமையில் உன்குரல் இணைத்திடு
வருங்காலம் வலமாக
கண்மையே காத்திடும் கனவினை
புதிதாய் உலகம் வேண்டாம்
இருப்பதை புதிதாக்கு ,
வா தோழா நிமிரலாம் உலகத்தில் ,,
தோழமையுடன் ,
உங்கள் கவியரசன் .
இதுவரை யாரும் அறிந்தது இல்லை
பெண்களின் மனதின் ஆழம் ,,
கடினமும் கூட
கதிரவன் அனலினை போல .
கார்மேகம் முழுவதையும்
கண்ணுள்ளே அடக்கி மையாக்கி வைப்பவள்
சிருதுளியில் உலகையே நிரப்பிடும்
ஒரு அமைதி வெள்ளம்
பக்குவப்படும் எரிமலையின்
ஒர் இடம் போலவே
நிர்கதியின் அர்த்தம் அவள் மனம்
மல்லிகையில் உடல் கொண்டு
மார்கழியின் குணம் கொண்டு
சிலநேரம் பங்குனியின் கோவமும் நடந்திடும்
காலையின் பொற்சித்திரம்
மங்கள முகமே
இச்சையின் ஆசையில்
இணங்கியே ஆகிறாள்
இயற்கையை அழைத்துண்டு
மண்ணுள்ளே செல்கிறாள்
பாவம் நீ மனிதி
உன் கரங்களில் ஒடுங்கட்டும்
உலகத்தின் போர்முகம் .
சினங்கொண்டு எழுந்திடு
பேதையும் நீயே
அறிவையும் நீயே
பவளத்தின் கணங்கொண்டு
பெண்சிங்கம் உண்டோ
வேட்டையின் மாற்றத்தில்.
ஆடையை உடுத்திடு
ஆடையாய் உடுத்திடு
காமத்தின் விழிகளில்
கருணையை காட்டாமல்
ஆடை என்பது உடலை மறைக்கத்தான்
புரிந்திடு நிமிர்ந்திடு .
தோழியும் நீயே
அன்னையும் நீயே
தமக்கையும் நீயே
என் காதலி மனைவியின் மாற்றங்கள் நீயே
கொலை என்பது முடிவுகள் அல்ல
கோழைத்தனத்தின் தொடக்கமே நீதான்
பாவம் என்பது தனியே இல்லை
மனதின் வரையறை தாண்டிடும் அதுவே .
சிரித்தாலே தவறல்ல
சிந்தனையில் தீமூட்டு
கண்மேலே கதிர் போல
இமையுண்டு மறந்திடு
பெண்ணே நீ பெண்தான்
கோடி கொடுத்தாலும் ஆணாகா உன் உடல்
மார்கட்டி மந்தையில் நடந்து திரிவான்
ஆண் மகன் .பெண்ணே இயலாது கண்ணகியே .
ஆண் பெண் சமத்துவம் இருக்கட்டும் ஒரு புறம்
ஆண் பெண் பேதத்தை தெளிவாய் நீ பார்த்திடு
பெண்ணுடல் எங்குமே உறுப்புதான் உன்னை போல்
காட்சியை காட்டாதே ,,பெண்ணே நீ புரிந்திடு .
காட்சியாய் பார்ப்பதை ஆணும் நீ தவிர்த்திடு ,
உலகம் நம் கையிலே நண்பா
நீயுமே ராணுவம்
நீயுமே தனியுகம் நெஞ்சினில் ஏற்றிடு
தோழியை காத்திடு
உலகம் என்பது தனியாய் இல்லை
நிலம் கொஞ்சம் ,நீர் கொஞ்சம்
நீ கொஞ்சம் நான் கொஞ்சம்
அழகாய் பார்த்திடு
அழகாய் ஆகிடும் ,
உலகே உன் கையில்
மெதுவாய் ஏறிடும்
மனிதியே மாற்றம் வரும்
உன் மனதினினை தேற்றிடு ,
காவல்கள் துணை வரும்
நிமிர்ந்தே நடந்திடு ,,
காரணம் நீயாக ஆகாமல்
இருந்தாலும் ,இல்லாமல் தவிர்த்திடு
கவலைகள் தீரட்டும்
தண்டனை கடுமையில் உன்குரல் இணைத்திடு
வருங்காலம் வலமாக
கண்மையே காத்திடும் கனவினை
புதிதாய் உலகம் வேண்டாம்
இருப்பதை புதிதாக்கு ,
வா தோழா நிமிரலாம் உலகத்தில் ,,
தோழமையுடன் ,
உங்கள் கவியரசன் .
Comments
Post a Comment