நடந்திடும் காதல்-2

முதல் பொட்டில் நீ ஏறிடவே
முழங்கால் இட்டு தவழ்ந்து வந்தேனோ
மூன்று முடிச்சுகள் நீ இடவே
முதல் முதலாய் நான் சிரித்தேனோ
புன்னகையின் காரணமே
என் புன்சிரிப்பின் ஓவியமே
எங்கே இருந்தாயாடா இத்துனை நாள்
தவற விட்டேனோ ,
உன் நிழல் என்மேல் விழாமல் .
என் ஜாமங்கள் இருட்டில் வாடியதே
வந்த ஒரு கணம்
நிலவே என் முகம் ஏறியதே.
மாயம் செய்து என்னை கொண்டாயோ
மனதால் என்னை கொன்றாயோ
விழுந்தேன் அடா முதல் முதாலாய்
உன் பாத தடம் கண்டு
காதலில் என்னை பிழிந்தவனே
என்னை எடுத்துகொள் உனதாக
பதில் போதுமோ உனக்கு ?

இரு மனம் ஏறிட
உறவுகளை போலவே
மழை வந்து ஆசி அருள
மொத்தத்தின் மூலமாய்
மூன்றாய் உயிரின் முடிச்சு இணைந்தது
கள்வனின் கைகளால் கள்ளியின் கழுத்திலே

சாங்கியத்தின் தேடலாக
தென்றல் வந்து துணை புரிய
அகதி மனங்களின்
விளிம்புகள் மட்டும்
இணைந்தே விட்டது
ஒரு துளி தங்கத்தின் முடிச்சிலே

காண நேரம் வாய்க்குமோ
வானவில் மழைதனில்
ஒன்றாய் நிற்பதை
கண்டே கண்டேன் கண்ணருகே
இஜ்ஜோடியின் வாயிலாக

கள்வருக்கு ஒரு மடல்,
வெட்கத்தின் உச்சி முனையில்
பேனா முனை கொண்டு தவழுகிறேன்
கண்ணுக்கு ஒரு முத்தமிடு
கண்ணோடு கதை பேசு
வார்த்தையை பேசிட என் நாணம்
என் காற்றுடன் சேர்க்கவில்லை
ஆதலால் எழுத்தால் பேசுகிறேன்
கேட்டுவிடு,,

ஊடலில் மொத்தம் எத்துனை வகையோ
அத்தனையும் முட்டையிட்டு
என் முன்னாள் அவிழ்த்துவிடு
முந்தானை  உனக்காக காத்திருக்கும்
மடி சேராத என் மன்னவனே
குழந்தையாய் மாறிவிடு,
செல்லமாய் பல்படாமல் ஒரு
கடி கடித்தால் என்ன ?
என்னிலை கண்டு என்னை
பரிதவிக்கதே ,உன் மனதின் ஆசை
என்மீதுவரை வீசுதடா

என் உயிர் பிரிந்தாலும்
போகட்டும் ஒரு முறை ,
உன் உயிர் விதைத்திடு
நித்திரை கொள்ளட்டும்
கருவறையில் நீயாக .

நிச்சையம் நீயாக தான் வேண்டும்
அன்னையாய் உனக்கானேன்
அன்னையாய் உனக்காக ஆவேன்
வந்து விடு ,என்னை கொன்றே விடு
மூச்சும் உனக்காகத்தான்

சிறு சிறு மொழிகளால் என்னை
கூசிவிடு ,
மை ஏந்தும் விழிகளால்
உன்னை மூடி விட நேரம் பார்கிறேன்
வா அருகே ,

நடக்கிறேன் அடா நானும்
உன் காதலில்
தவழட்டும் என்னுடன்
நம் குழந்தையும்
மீசை குழந்தையே வா .



Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு