பசி
வியர்வையில் துணி நனைத்து
வயிற்றோடு ஒத்திஉலர்த்திய
காலத்தில் கனவென்பது
ஒருவேளை உணவென்பேன் !
விழும் பருக்கைகள்
எனக்காக விழக்கூடாதா என்று
வேடிக்கைபார்த்த வித்தியாச மனிதர்களில்
அன்று நானும் ஒருவன்
இரைக்காமல் சாப்பிடு என்று
அம்மா சொல்வதில்
என் பசி அடங்கிவிடும் ,
எதுவும் மிச்சமில்லை எனக்காக !
எச்சில் இலை என்று எட்டிஎரிவதை
எச்சிலூற உண்ணும்
ஏகோபித்திய மாக்களில் ஒருவன்
உடுத்திய துணியில் மிடுக்கைபார்த்து
படுத்த இடத்தில் வீட்டை பார்த்து ,
சாப்பிட்டாயா கேள்வியாய் கேட்டு
சந்தித்த மனிதர்கள் கைகுலுக்கி
சற்றே பார்த்தால் !ஆன காலம்
வீட்டை பிரிந்து விலாசம் தொலைந்து
விண்ணே அடைக்கலமாய்
வீணே அலையும்
எவருக்கும் பொருந்தும்
எனக்கும் சமர்ப்பணம் !
Comments
Post a Comment