கண்மணியே – தொடர்-1




விடியலுக்கு முன் வியர்க்கின்றது கண்மணியே
விண்தூரம் சென்றாலும் சொல்லித்தான் செல்வாயே
விழியோரம் கண்ணீராய் கசிந்து சென்றாயே

ஜன்னலின் ஓரத்தில் அடைமழை
வாசலில் அவள் .
மின்னலின் வடிவத்தில் அவள்பார்வை
-நிஜ இருட்டு .

இயல்பாய் கடந்த உன்
இரு புருவங்களில்
இயலாமல் போனதென் நெஞ்சம்

மின்சார வருகை
வராமல் வந்ததுபோல்
உன் தொடுகை

நனைந்துபோன உடைகளுக்குள்
சலனமான உடல்
மூச்சுக்காற்றில் முகம் பதிக்க
கொதிக்கிறதே என் தேகம்
...

தொடரும்

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு