Avalukkaga
என் இதய துடிப்பை நிறுத்துகிறேன்
என்னவள் துயில் உறங்குகிறாள் ,

கவிதைகள் இல்லை இவ்வுலகிலே
இக்கவிதையை வர்ணிக்க!!!

தமிழ் அகராதியில் தேடிபார்த்தேன்
இல்லை என்ற பதில் தான்
எனக்கு கிடைத்தது ..


பிரம்மன்னும் பிரமித்தான்
போலிருக்கிறது
உன்னை படைத்தது தவிறவிட்டதற்கு

இயல் இசை நாடகத்தில்
உன் பெயரும் சேர ஆசைபடுகிறேன்
இச்சிற்பத்தை உணர்த்திட ..

தெளிவாய் தெரியவில்லை
நான் தொலைந்த நாள் ,,
அழகிற்கும் மேலாய் ஒருவார்த்தை
இருந்தால் கூறுங்கள்
அவளிடம் கூற வேண்டும்

சிலையை நடக்க செய்தவன் யாரோ
உன்னை கண்ட பின்னர்
தோன்றுகிறது

உன் இதழோர மச்சமாய் நன் இருக்க
உன் நுனி விரல் தீண்டுகையில்
மோட்சம்  பெற்றேன்

உன் அழகின் வசந்த
பார்வையில் நம்
உலகம் சிறிதாய்  ஆனதடி

கவிதைகள் கன்னிதீவாய் நீள
கஷ்டங்கள் தேதி தாளை குறைய
நேரங்கள் உன் நுநி விரலில் சுருங்க
தூங்கா பொழுதுகள் சதமடிக்கின்றன ..




Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு