என் தந்தையுடன் நான் ,

என் தந்தையுடன் நான்

கைகள் படைத்து இருப்பது
உம் விரல் கோர்த்து
நீவிர் வழிகாட்ட தான்

என் கால்கள் படைத்து
இருப்பதும் உம்மை பின்ப்பற்றி
நடக்கத்தான்  என்பதை
உணர்கிறேன் இப்போது

கலங்கரை விளக்கமாய் நீயிருக்க
வழிதேடும் மிதவை நான்
கடிகார முள்லாய்
நீஇருக்க  நேரமாய் நான்
கணிப்பொறி விசையாய் நீ
தேடுபோறியாய் நான்

நீராய் நீ இருந்தால்
மூழ்கி போவேனா நான்
காற்றை நீ இருக்க
விழுந்து விடுவேன நான்

நிலமாய் நீ இருக்க
முளைக்காமல் போவேனா நான்
மரமாய் நீ இருக்க
பேயாமல் போவேனா நான்

கேட்டு போய்விடுமென தெரிந்தே
பால் தயிராக்க படுகிறது
செத்து போய்விடுமென தெரிந்தே
கோழி வளர்க்க படுகிறது
ஓடிப்போய் இடுமென தெரிந்தே
மாடுகள் கட்டி போடப்படுகின்றன
வீணாய் போய் விடுமென
தெரிந்தே உணவுகள் உரமாக்கபடுகின்றன

இதெல்லாம் தெரிந்தவர் என்
தந்தை என்பதாலோ என்னவோ
நான் நல்லவனாகவே இருக்கிறேன்,,

உன் கரம் பிடுத்து கோவில்
செல்லும் வேளைகளில் உணரவில்லை
சாமியுடன் தான் நடக்கிறேன் என்று

தன் உதிரத்தில் உயிர் கொடுத்தாய்
உழைப்பிலே உணவளித்தாய்
கஷ்டத்திலே பணமளித்தாய்
உனக்கன்றி ஆடை அளித்தாய்
வாழ்நாளின் பாதியை செலவழித்தாய்
எதற்காக !! எனக்காக !!!

தனக்கென ஏதுமின்றி
எனக்கென எல்லாம் செய்த
உன் பாசத்திற்கு என் செய்வேன் நான்
உம் உடலுக்கு கொல்லி இடுவதை தவிர

என் தாயின் பாசமோ
அன்பால் நிரம்பியது ,,ஆனால்
உம் பாசமோ அக்கறை
என்னும் அன்பிலே திளைத்தது ,,

திருவிழாவில் தொலைந்துவிடுவேன்
என்கிற பயத்தில் உம்
அறை ஞான் கயிற்றிலே என்னை
கட்டியது உம் உச்சகட்ட பாசம்

தந்தைக்கு கருவறை இல்லை
என்று எவன் சொன்னது
தாயின் கருவறை பத்து
மாதத்திலே  நிறைவுற்றது
என் தந்தையின் கருவறையோ
தன சாவின் வரை பேணிகாப்பது,

உந்தன் தோளிலே ஏறி
வானத்தை கண்டவன் நான்
உம்மை தலை குனிய செய்தும்
என்னை கிழே விடுவதில்லை
காரணம் ஏனோ.,,உன் அன்பின் உச்சமது ,,

கோவில்களை இடித்து விடுங்கள்
உண்மை கடவுள்கள்
அனைவர் வீட்டிலும் உள்ளனர் ,

தாய் தந்தை இல்லாதவஇடம்
கேட்டு பாருங்கள் முதியோர் இல்லங்கள்
விரைவிலே மூடப்படும்,

                இவ்வளுவும் உன்னை இழந்த பின்னர்
தோன்றுவது தான் கடவுள்
எனக்கு கொடுத்த சாபம்,,
அப்பா என்கிறது என் அழ்மனது ,,\
உங்களுக்காக எழுதியது தான் இக்கவிதை ,,,

இக்கவிதை உண்மையாய்
தன தந்தையை  நேசிக்கும்
ஒவ்வொருவற்குக்கும் சமர்ப்பணம் ...

முதியோர் இல்லத்தருகே \
எழுதி வையுங்கள் ,,
உங்களுக்கும் இதே நிலைதான் என

உரைக்கட்டும் .

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு