என் வீட்டு கண்ணாடி

               என் வீட்டு கண்ணாடி
                       
                        பழுதாகி போனதென்று
நினைக்குறேன் என்னையும் 
அழகாய் காட்டுகிறது

என்னுடன் தான் நீயும்
இருந்தாய் ,பின்னர் ஏன்
உனக்குமட்டும் வயதாகவில்லை

நான் சிரித்தால் சிரிக்கிறாய்
அழுதாலும் அழுகிறாய் உன்னை
காட்டிலும் உற்ற நண்பன் எவனடா!!

என் வீட்டின்  காவலாய்
நீ இருக்க ,மற்ற கண்களில்
இருந்து தடுப்பதேனடா




உடைந்தால் வீட்டிற்கு ஆகதென
சொல்லும் அளவாய் நெருங்கிவிட்டாய்
என் வீட்டில் நீ

என் முகத்தை மட்டும்
கண்கிறாயே வெறுக்க
இல்லையா உமக்கு
அந்த அளவா நேசிக்கிறாய்
என்னை ,,-_இல்லை ""காதலா"" என்மேல்

உனக்கோ பொய் பேச தெரியாதே
எப்படி பிழைக்கிறாய் இவ்வுலகிலே

இவ்வளவு அழகை பிரதிபலிக்கும்
உனக்கு வாயை ஏன் கொடுக்க
மறந்தான் ஒருவேளை உனக்கும்
காதல் திருமணமா




உலகில் நீ ஒருவன் தானடா
ஏழை முதல் பணக்காரன்வரை
சமமாய் காண்கிறாய்

படுக்கை முதல்
பாத்ரூம் வரை எங்கும் நீ
ஒருவேளை கடவுளா நீ

என்னவொரு வரம் உனக்கு
எல்லா கன்னிகளையும்
துயிலுரித்து காண்கிறாய்

நீயும் என் மனம் போலதான்
உடைந்த பின்னர் ஓட்ட
நேர்வதில்லை

ஒருவேளை நீ இல்லாமல்
இருந்து இருந்தால் அழகி
என எவளும் இல்லை

பித்து பிடித்தவன் போல்
உன்னையும் புகழ்கிறேன்
என் வீட்டு  கண்ணாடியே

உமக்கும் நன்றி ....

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு