Eezham enthan URAVU

 “” என் ஈழத்தின் ஓலமும், என் மீனவன் கோலமும்””   

உப்பு காற்றின் சோலையிலே
என் ஈழ தமக்கையின்
வாசம் வீசுதடா!!!

கரையான் பிடித்த மனதுக்கு
எங்கே தெரியும் என்
தமிழர் மாண்பும் உறவும்!!!

இராவணன் இரத்தமோ என்னவோ
இருப்பவனும் பிறப்பவனும்
அரக்கனாகவே இருக்கிறான்!!!

கடற்கரை மண்ணிலும்
கண்ணீர் வடிகிறதே
ஈழ தமிழின் ஓலம் கேட்கையிலே !!!!



என் அய்யன் வள்ளுவனின்
ஒரு குறளை கூடவா அவன்
கேட்கவில்லை ,அதானே
மனிதனுக்காக படைக்கபட்டது தானே
“”””திருக்குறள் “””

சுற்றிலும் நீர் இருக்க
உப்பு காற்றின் மனமின்றி
குருதி காட்டின் வாசம் நிக்குதுதடா!!!

என் ஈழ தமிழச்சியின்
கருவறையிலும் கண்ணீர்,,
ஈரக்குலை நடுங்குதடா !!!

என் உணர்வின் கண்ணீருக்கு
மட்டும் வலிமை இருந்தால்
அவன் இன்று இருந்திருக்கமட்டான்!!!

மனிதம் என்ற உணர்வு
தெரிந்து இருந்தால் அவன்
இவ்வாறு செய்திருக்கக் மாட்டான்!!!


உயிர் என்ற ஒற்றை
வார்த்தைக்கு மதிப்பில்லை
சிங்கள மண்ணிலே !! பாவப்பட்ட
என் ஈழ தமிழிடையே !!!
கருவாடும் துடி துடிக்கும்
என் இன மீனவன்
நிலை கணையிலே!!!

தினம் தினம் மரணத்தை
காண்கிறான் கால் அடி
வயிற்றின் பசி தீர!!!

என் இன மீனவன்
நாய்கள்  இல்லை _
நாய்களை கூட சுடுவது இல்லை
இதை ஏனோ இந்நாய்கள்
உணர்வதும் இல்லை !!!

கடலும் ஓரடி உயர்ந்து
இருக்கிறது என் கடலோர
மக்களின் கண்ணீராலே !!!

நல் காற்றை முகரும்
என் நாட்டிற்கு என்ன
தெரியும் என் உப்பு
காற்றின் வேதனைகளை!!!

மார்பிலே குண்டை வாங்குகிறான்
இவன் இராணுவம் இல்லை !!!

கேட்க நாதியும் இல்லை
இவன் அகதியும் இல்லை !!!

கணப்போழுதிலே கண்ணை
மூடுகிறான் நோயாளியும் இல்லை !!!

என் இன மீனவ
சமுகத்தை நாட்டில் இருந்து
ஒதுக்கி விட்டர்களா என்ன!!

தண்ணீரில் தத்தளித்த
சென்னையை மீட்ட என்
தமிழனுக்கு ,கண்ணீரால்
மிதக்கும் என் மீனவன்  ஏன் தெரியவில்லை !!!
இவன் பணம்  இல்லாவதவன்
என்பதாலா !!இல்லை நிறம்
இல்லை என்பதாலா!!

மார்கிழித்து போர் செய்தும்
மானம் துறந்து உயிர்
விடினும் என் ஈழ தமக்கை
சிறந்தவளடா உலகிலே!!

தமிழும் தமிழனும்
மற்றவரை வாழ வைக்கத்தான் !!!

காற்றிலே ஆடும் தக்கையை
போல வாழ்கிறோம்
நிரந்தரம் இல்லா வாழ்கையை!!!

என் எழுத்து வேட்கையை
காகிதத்தில் அனுபினால்
எரிந்துவிடுமென அஞ்சி !!
கணிப்பொறி ஓலையிலே
அனுப்புகிறேன் ,,,பார்த்து பிரிக்கவும் ...

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா!!!!


நன் மீனவனும் இல்லை !!
ஈழமும் இல்லை !!
உங்களை போல தமிழன் தான்

என் உணர்ச்சிக்கு காற்றிற்கு
வடிவம் தந்து இருக்கிறேன்
என் எழுத்தின் மூலம்!!!!


Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு